வேறு வழியின்றி பாஜகவுடன் கூட்டணி வைத்தேன் என்று எடப்பாடி பழனிசாமி கூறினாரா?

சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

‘’காலை விரித்தேன், கொள்வார் இல்லை என்பதை போல அதிமுகவுடன் கூட்டணி வைக்க மற்ற கட்சிகள் தயார் இல்லை. எனவேதான் வேறுவழியின்றி பாஜகவுடன் கூட்டணி வைத்தேன்,’’ என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். 

இதில், ‘’ காலை விரித்தேன், கொள்வார் இல்லை என்பதை போல அதிமுகவுடன் கூட்டணிக்கு வர மற்ற கட்சிகள் தயார் இல்லை. எனவேதான் வேறுவழியின்றி பாஜகவுடன் கூட்டணி வைத்தேன். ஆங்கில நாளிதழுக்கு எடப்பாடி பழனிசாமி பேட்டி,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  

Claim Link 1 l Claim Link 2  

Polimer News லோகோ உள்ளதால், பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர். 

உண்மை அறிவோம்:

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜகவுடன் கூட்டணி வைப்பதாக, சமீபத்தில் தெரிவித்தார். இதன்படி, 2026ம் ஆண்டு நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், அதிமுக- பாஜக கட்சிகள் கூட்டணி அமைத்து, போட்டியிட உள்ளன. அதேசமயம், மேலும் சில அரசியல் கட்சிகள் இந்த கூட்டணியில் இணைய உள்ளதாகவும், மறுபுறம் இந்த கூட்டணி எப்போது வேண்டுமானாலும் உடையக்கூடும் எனவும் விமர்சிக்கப்படுகிறது. 

BBC Tamil l ETV Bharat l DD Tamil News 

இந்நிலையில், அதிமுகவுடன் கூட்டணிக்கு வர மற்ற கட்சிகள் தயார் இல்லை. எனவேதான் வேறுவழியின்றி பாஜகவுடன் கூட்டணி வைத்தேன், என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாகக் குறிப்பிட்டு, சமூக வலைதளங்களில் ஒரு நியூஸ் கார்டை சிலர் பரப்புகின்றனர். 

ஆனால், இது உண்மையான நியூஸ் கார்டு கிடையாது. Polimer News வெளியிட்ட வேறொரு நியூஸ் கார்டை எடுத்து, எடிட் செய்தே இவ்வாறு வதந்தி பரப்புகிறார்கள். 

இதன்படி, Polimer News வெளியிட்ட உண்மையான நியூஸ் கார்டில், ‘’தனி மெஜாரிட்டியுடன்.. தமிழகத்தில் தனிக்கட்சி ஆட்சி அமைவதையே மக்கள் எதிர்பார்க்கின்றனர். தனி மெஜாரிட்டியுடன் வெற்றி பெற்று அ.தி.மு.க ஆட்சி அமைக்கும் – இ.பி.எஸ் ,’’ என்றுதான் எழுதப்பட்டுள்ளது.  

உண்மையான நியூஸ் கார்டையும், போலியான நியூஸ் கார்டையும் ஒப்பீடு செய்து, கீழே இணைத்துள்ளோம். 

கூடுதல் ஆதாரத்திற்காக, பாலிமர் நியூஸ் ஆசிரியர் குழு, அதிமுக ஐ.டி.பிரிவு தரப்பிலும் பேசி, உறுதிப்படுத்தியுள்ளோம். 

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட நியூஸ்கார்டு, உண்மையானதல்ல, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:வேறு வழியின்றி பாஜகவுடன் கூட்டணி வைத்தேன் என்று எடப்பாடி பழனிசாமி கூறினாரா?

Fact Check By: Pankaj Iyer  

Result: Altered

Leave a Reply