
‘’தலைவி படத்தில் சட்டசபை சேலை கிழிப்பு நாடகத்தை இன்னமும் தத்ரூபமாக எடுத்திருக்கலாம் என்று ஜெயக்குமார் பேச்சு,’’ என சமூக வலைதளங்களில் பகிரப்படும் நியூஸ் கார்டு ஒன்றை கண்டோம். அதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி உண்மையா என்று கேட்டிருந்தார். இதே செய்தியை உண்மை என நம்பி பலரும் ஃபேஸ்புக்கில் ஷேர் செய்வதைக் கண்டோம்.
உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட செய்தியை நியூஸ்7 தமிழ் ஊடகம் வெளியிடவில்லை. இதுபற்றி நாம், அவர்களது டிஜிட்டல் பிரிவு நிர்வாகி சுகிதா அவர்களை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டபோது, ‘’வழக்கம்போலவே எங்களது பெயரில் பகிரப்படும் போலியான செய்தி இது,’’ எனக் குறிப்பிட்டார்.
இதற்கடுத்தப்படியாக, நியூஸ்7 தமிழ் ஊடகத்தின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டிருந்த உண்மையான செய்தியை கண்டோம். ஆதாரத்திற்காக கீழே இணைத்துள்ளோம்.
இதன்படி, தலைவி படத்தில் எம்ஜிஆரை அவமதிப்பது போல இடம்பெற்றுள்ள காட்சியை நீக்கும்படி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார். அந்த தகவலை எடுத்து, எடிட் செய்து, சேலை கிழிப்பு நாடகம் பற்றி அவர் கருத்து கூறியதைப் போல வதந்தி பரப்பியுள்ளனர் என்று சந்தேகமின்றி தெளிவாகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel

Title:தலைவி படத்தில் சட்டசபை சேலை கிழிப்பு நாடகம் சரியாக எடுக்கப்படவில்லை என்று ஜெயக்குமார் கூறினாரா?
Fact Check By: Pankaj IyerResult: Altered
