பஹல்காமில் நடத்தப்பட்டுள்ள மனிதாபிமான பயங்கரவாத தாக்குதல் என்று மு.க.ஸ்டாலின் கூறினாரா?

Altered அரசியல் சார்ந்தவை | Political இந்தியா | India

‘’பஹல்காமில் நடத்தப்பட்டுள்ள மனிதாபிமான பயங்கரவாத தாக்குதல்,’’ என்று மு.க.ஸ்டாலின் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு நியூஸ்கார்டு பற்றி ஆய்வு மேற்கொண்டோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். 

இதில், ‘’ ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பஹல்காமில் நடத்தப்பட்டுள்ள மனிதாபிமான பயங்கரவாத தாக்குதலுக்கு கடும் கண்டனத்தையும், அதில் உயிரிழந்த அனைவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தாக்குதலுக்கு பயங்கரவாத அமைப்பு ஒன்று பொறுப்பேற்றுள்ளது. தீவிரவாத அமைப்புகளை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும். – சட்டப்பேரைவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்,’’ என்று எழுதப்பட்டுள்ளது. 

Claim Link 1 l Claim Link 2 l Claim Link 3 

ஜூனியர் விகடன் லோகோ உள்ளதால், பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர். 

உண்மை அறிவோம்:

மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது இது எடிட் செய்யப்பட்ட நியூஸ் கார்டு என்று தெரியவந்தது. 

இதன்படி, ஜூனியர் விகடன் வெளியிட்ட உண்மையான நியூஸ் கார்டில், மனிதாபிமானமற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு கடும் கண்டனம் என்றுதான் எழுதப்பட்டுள்ளது. இதனை வேண்டுமென்றே அரசியல் உள்நோக்கத்துடன் எடிட் செய்து, வதந்தி பரப்புகிறார்கள், என்று தெளிவாகிறது. 

Junior Vikatan Link 1 l Link 2 

கூடுதல் ஆதாரத்திற்காக, நாம் ஜூனியர் விகடன் டிஜிட்டல் பிரிவிலும் பேசி உறுதிப்படுத்தியுள்ளோம். 

அடுத்தப்படியாக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பஹல்காம் தீவிரவாத தாக்குதல் தொடர்பாக, சட்டப்பேரவையில் பேசியது பற்றிய முழு வீடியோ லிங்கையும் கீழே இணைத்துள்ளோம். 

இறுதியாக, உண்மையான நியூஸ் கார்டையும், எடிட் செய்த நியூஸ் கார்டையும் ஒப்பீடு செய்து, கீழே இணைத்துள்ளோம். 

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட நியூஸ் கார்டு எடிட் செய்யப்பட்ட ஒன்று, என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram 

Avatar

Title:பஹல்காமில் நடத்தப்பட்டுள்ள மனிதாபிமான பயங்கரவாத தாக்குதல் என்று மு.க.ஸ்டாலின் கூறினாரா?

Fact Check By: Pankaj Iyer 

Result: Altered

Leave a Reply