
‘’வானதி சீனிவாசன் மத்திய அரசுக்கு எதிராகப் போராடினார்,’’ என்று கூறி பகிரப்படும் ஃபேஸ்புக் புகைப்படங்கள் பலவற்றை காண நேரிட்டது. அவற்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:

ஜூன் 13, 2021 அன்று இந்த ஃபேஸ்புக் பதிவை, திராவிடத் தமிழன் என்ற ஐடி வெளியிட்டுள்ளது. இதில் வானதி சீனிவாசன் கையில் பதாகை ஒன்றை ஏந்தியுள்ளார். அந்த பதாகையில், ‘’மானங்கெட்ட ஒன்றிய அரசே போடுறன்னு சொன்ன 15 லட்சத்தை அக்கௌண்டில் போடவும்,’’ என்று எழுதியுள்ளனர்.
இதனைப் பலரும் உண்மை என்று நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட ஃபேஸ்புக் பதிவர் மேற்கண்ட வானதி சீனிவாசன் புகைப்படத்தை வைத்தே மேலும் பல பதிவுகளை பகிர்ந்துள்ளதையும் கண்டோம். அவை அனைத்துமே சற்று வக்கிரமாகவே இருந்தன.
அவற்றையும் கீழே ஆதாரத்திற்காக இணைத்துள்ளோம்.

FB Claim Link 1 I Claim Link 2 I Claim Link 3 I Claim Link 4
எனவே, இவர் வானதி சீனிவாசனை தனிப்பட்ட முறையில் குறிவைத்து வேண்டுமென்றே இவ்வாறான வதந்திகளை தயாரித்து, பகிர்வதாக சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
இவர் ஆதாரமாக வைத்துள்ள புகைப்படம் உண்மையில் கடந்த ஜூன் மாதத்தில் கொரோனா ஊரடங்கு காலத்தில் தமிழ்நாடு முழுக்க டாஸ்மாக் திறப்பதை கண்டித்து, வானதி சீனிவாசன் போராட்டம் நடத்தியபோது எடுக்கப்பட்டதாகும். உண்மையான புகைப்படத்தை அவரே ட்விட்டரில் பகிர்ந்திருக்கிறார். கீழே அதனை இணைத்துள்ளோம்.
ஏற்கனவே குறிப்பிட்ட புகைப்படத்தை எடிட் செய்து, சில வதந்திகள் பகிரப்பட்டிருக்கின்றன. அதுபற்றியும் நாம் ஆய்வு செய்து செய்தி வெளியிட்டிருக்கிறோம். அதனை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel

Title:வானதி சீனிவாசன் பற்றி பகிரப்படும் பலவிதமான வதந்திகள்
Fact Check By: Pankaj IyerResult: Altered

தவறான கருத்தை பதிவிட்டமைக்கு வருந்துகிறேன்