சனாதனத்தை ஆதரிக்கும் உண்மையான இந்துக்கள் மட்டும் பாஜக-வுக்கு வாக்களித்தால் போதும் என்று அண்ணாமலை கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Twitter I Archive

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை புகைப்படத்துடன் கூடிய நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், "பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம்! சனாதனத்தை ஆதரிக்கும் உண்மையான ஹிந்துக்கள் மட்டும் பாஜகவுக்கு வாக்களித்தால் போதும்; சனாதனத்தை எதிர்க்கும் யாரும் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம் - அண்ணாமலை மாநில பாஜக தலைவர்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த பதிவை திராவிட மாடல் 🔥🔥🔥 @dravidam_100 என்ற எக்ஸ் (ட்விட்டர்) ஐடி கொண்டவர் 2023 செப்டம்பர் 4ம் தேதி பதிவிட்டுள்ளார். இதை பலரும் ரீபோஸ்ட் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

சனாதன எதிர்ப்பு மாநாட்டில் தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. அமைச்சருக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் சமூக ஊடகங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். இந்த சூழலில் சனாதனத்தை ஆதரிக்கும் இந்துக்கள் மட்டும் வாக்களித்தால் போதும் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உதயநிதியை விமர்சித்து அண்ணாமலை பேட்டி அளித்திருந்தார். அந்த பேட்டியில் சனாதனத்தை ஆதரிக்கும் இந்துக்கள் வாக்களித்தால் போதும் என்று கூறியதாக எந்த செய்தியும் இல்லை. மேலும் இந்த நியூஸ் கார்டை பார்க்க, கதிர் நியூஸ் ஊடகம் வெளியிடும் நியூஸ் கார்டு போல இல்லை. எனவே, இது பற்றி ஆய்வு செய்தோம்.

முதலில் கதிர் ஊடகத்தின் ஃபேஸ்புக் பக்கத்தை பார்வையிட்டோம். அதில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்று எந்த நியூஸ் கார்டும் இல்லை. நியூஸ் கார்டு வெளியிடுவதையே பெருமளவு அந்த ஊடகம் குறைத்திருப்பதைக் காண முடிந்தது. கடைசியாக ஆகஸ்ட் 15ல் நியூஸ் கார்டு வெளியிட்டிருந்தனர். எனவே, இந்த நியூஸ் கார்டு போலியானது என்பது தெளிவானது. இதை உறுதி செய்ய அந்த ஊடகத்தின் நிர்வாகியைத் தொடர்புகொண்டு கேட்டோம். அவரும் இது போலியானது என்று உறுதி செய்தார்.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில் சனாதனத்தை ஆதரிக்கும் இந்துக்களின் வாக்குகள் மட்டும் போதும் என்று அண்ணாமலை கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

சனாதனத்தை எதிர்ப்பவர்களின் வாக்குகள் வேண்டாம் என்று அண்ணாமலை கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:சனாதனத்தை எதிர்ப்பவர்களின் வாக்குகள் வேண்டாம் என்று அண்ணாமலை கூறினாரா?

Written By: Chendur Pandian

Result: False