
‘’ ஆன்லைனில் மனித சிறுநீரை பாட்டிலில் பிடித்து, கோமியம் என்று ஏமாற்றி, விற்கிறார்கள்,’’ என்று அர்ஜூன் சம்பத் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:
இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’நண்பர்களே, ஆன்லைனில் கோமியம் வாங்கும்போது எச்சரிக்கையாக இருங்கள். பலர் தங்களுடைய சிறுநீரை பிராண்டட் பாட்டில்களில் அடைத்து, அதை கோமியம் என்று அனுப்புகிறார்கள். – அர்ஜூன் சம்பத்,’’ என்று எழுதப்பட்டுள்ளது.
பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். முதலில், நாம் இதுபற்றி அர்ஜூன் சம்பத் தரப்பில் தொடர்புகொண்டு, விளக்கம் கேட்டோம். அப்போது, ‘’இதுபோன்ற எந்த பதிவையும் அர்ஜூன் சம்பத் வெளியிடவில்லை. அவரது பெயரில் சமூக வலைதளங்களில் செயல்படும் போலியான கணக்கு ஒன்றில் இருந்து, இவ்வாறு பதிவிட்டு, வதந்தி பரப்புகின்றனர்,’’ என்று தெரிவிக்கப்பட்டது.
அர்ஜூன் சம்பத்தின் உண்மையான X வலைதளம் மற்றும் ஃபேஸ்புக் கணக்கு லிங்க் இங்கே தரப்பட்டுள்ளது.
அதேசமயம், நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஃபேஸ்புக் பதிவை வெளியிட்ட ஐடி.,யின் பெயர் வேறொன்றாக உள்ளது.
தற்போது இந்த ஐடி., செயல்பாட்டில் இல்லை.
எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட தகவலை, அர்ஜூன் சம்பத் வெளியிடவில்லை என்று, சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Title:ஆன்லைனில் விற்கப்படும் கோமியம் பற்றி அர்ஜூன் சம்பத் கருத்து தெரிவித்தாரா?
Fact Check By: Pankaj IyerResult: False
