உத்தரப்பிரதேசத்தில் ஹோலி கொண்டாட்டத்தில் வன்முறை என்று பரவும் வீடியோ உண்மையா?

உத்தரப்பிரதேசத்தில் ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தில் சிலர் பயங்கர ஆயுதங்களை வைத்துத் தாக்கிக்கொண்டதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சாலையில் இளைஞர்கள் கட்டை, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை வைத்து வாகனங்களைத் தாக்கி உடைக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “உத்தரபிரதேசத்தில் ஹோலி பண்டிகை” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த ரீல்ஸை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். உண்மை […]

Continue Reading

நாக்பூரில் தொழுகை முடித்து வெளியே வந்தவர்கள் மீது போலீஸ் தாக்குதல் என்று பரவும் வீடியோ உண்மையா?

நாக்பூரில் மசூதியில் தொழுகை முடித்துவிட்டு வெளியே வந்த மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இரண்டு இஸ்லாமிய இளைஞர்களை போலீசார் தாக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “திங்கள்கிழமை நாக்பூரில் மசூதியிலிருந்து தொழுகை முடிந்து வெளியே வந்த மாணவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த […]

Continue Reading

அரசுப் பள்ளியில் ஆடலும் பாடலும் நிகழ்ச்சி நடத்தப்பட்டதா?

தமிழ்நாடு அரசுப் பள்ளிக் கூடம் ஒன்றில் ஆடலும் பாடலும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பள்ளி மாணவர்கள் போன்று சீருடை அணிந்த சிலர் தமிழ் சினிமா பாடல் ஒன்றுக்கு நடனமாடும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. வீடியோவில், “ஸ்கூல்ல யே *** கூட்டி குடுத்தா எவன்டா கல்யாணம் பண்ணுவான்” என்று ஆபாசமாக குறிப்பிடப்பட்டிருந்தது. […]

Continue Reading

கருக்கலைப்புக்குச் சலுகை இல்லை என்று சீமான் ஆதங்கப்பட்டாரா?

கருக்கலைக்க காரணமான ஆண்களுக்கு பட்ஜெட்டில் எந்த சலுகையும் இல்லை என்று சீமான் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பாலிமர் நியூஸ் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “கவர்ச்சி அறிவிப்புகளுடன் கூடிய வெற்று அறிக்கை. பட்ஜெட்டில் கருக்கலைக்கக் காரணமான ஆண்களுக்கு எந்த சலுகையும் இல்லை இதெல்லாம் ஒரு பட்ஜெட்டா? நான்காண்டுகளில் செய்யாததை […]

Continue Reading

‘இந்தியா’ என்ற பெயருக்கு விரிவாக்கம் உள்ளதா?

இந்தியா (INDIA) என்ற பெயருக்கு ஆகஸ்ட் மாதம் சுதந்திரம் பெற்ற நாடு (Independent Nation Declared In August) என்று விரிவாக்கம் உள்ளது என்று சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: threads.net I Archive இந்தியா என்ற வார்த்தைக்கு என்ன விரிவாக்கம் என்று ஒரு பெண் கேட்கும் வீடியோவை சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதற்கு ஒருவர் ஆகஸ்ட் மாதம் […]

Continue Reading

திமுக ஆட்சியில் செங்கல்பட்டு பள்ளி மாணவர்கள் கஞ்சா போதையில் மோதல் என்று பரவும் வீடியோ உண்மையா?

தி.மு.க ஆட்சியில் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சார்ந்த பள்ளி ஒன்றின் மாணவர்கள் கஞ்சா போதையில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பள்ளி மாணவர்கள் பயங்கரமாக தாக்கிக்கொள்ளும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “சென்னை, செங்கல்பட்டு மாவட்டம் தமிழ்நாட்டின் அப்பா வளர்ப்பில் பள்ளி பிள்ளைகள் கஞ்சா போதையில் ஆனந்தமாய் ஆடி […]

Continue Reading

இந்தியில் பேசிய சுந்தர் பிச்சை என்று பரவும் வீடியோ உண்மையா?

கூகுள் தலைவர் சுந்தர் பிச்சைக்கு இந்தி தெரியாது என்று தமிழ்நாட்டுத் தலைவர்கள் கூறி வரும் நிலையில், சுந்தர் பிச்சை இந்தியில் பேசிய வீடியோ ஒன்றை பாஜக ஆதரவாளர்கள் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சுந்தர் பிச்சை தனக்கு இந்தி தெரியாது என்று கூறியதாக தமிழ்நாடு அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கூறிய காட்சி மற்றும் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை இந்தியில் […]

Continue Reading

குஜராத் ஆம் ஆத்மி நிர்வாகி வீட்டில் சிக்கிய பணம் என்று பரவும் வீடியோ உண்மையா?

குஜராத் ஆம் ஆத்மி கட்சி நிர்வாகி வீட்டில் சிக்கிய பணம் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கட்டுக்கட்டாக அறை முழுக்க நிறைந்திருக்கும் பணத்தை சிலர் இயந்திரம் உதவியோடு எண்ணும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “குஜராத் சூரத் நகர ஆம் ஆத்மி கட்சித் தலைவர் சேகர் அகர்வாலின் வீடு இடி ரைடில் பெற்ற […]

Continue Reading

“தமிழ் படித்தால் பிச்சை கூட கிடைக்காது” என்று நிர்மலா சீதாராமன் கூறினாரா?

தமிழ் படித்தால் பிச்சை கூட கிடைக்காது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பாலிமர் தொலைக்காட்சி வெளியிட்ட செய்தியை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பதிவிட்டுள்ளனர். அதில், “தமிழ் படித்தால் பிச்சை கூட கிடைக்காது மக்களவையில் காட்டமாக பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.  உண்மைப் பதிவைக் காண: […]

Continue Reading

“வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்வோம்” என்று வெளிப்படையாக அமித்ஷா அறிவித்தாரா?

நீங்கள் காங்கிரசுக்கு ஓட்டுப் போட்டாலும் அது காங்கிரசுக்கு போகாது என்று வெளிப்படையாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்யப்படும் என்ற அர்த்தத்தில் அமித்ஷா பேசியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இரு வேறு நியூஸ் கார்டுகளை ஒன்று சேர்த்து ஒரே பதிவாக ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. முதல் நியூஸ் கார்டில், “வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் பாஜக நிர்வாகிகள்” […]

Continue Reading

இந்து கோவிலில் இருந்து ரூ.445 கோடி வசூலித்து மசூதி, சர்ச்சுகளுக்கு வழங்கியதா தி.மு.க அரசு?

இந்து கோவில்களிலிருந்து ரூ.445 கோடி பணத்தை வசூலித்து அதில் 330 கோடியை மசூதி, தேவாலயம் கட்ட கொடுத்த தி.மு.க அரசு என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தினமலர் நாளிதழ் வெளியிட்ட செய்தியை ஸ்கிரீன்ஷாட் எடுத்து யாரோ ஒருவர் வெளியிட்ட பதிவை மீண்டும் ஸ்கிரீன்ஷாட் எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். அந்த செய்தியில், “கோயில்களில் இருந்து ரூ.445 […]

Continue Reading

பெரியார் மையத்தில் இந்தி என்று பரவும் புகைப்படம் – உண்மை என்ன?

பெரியார் மையத்தில் இந்தியில் எழுதப்பட்டிருப்பதாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பெரியார் மையத்தில் தமிழ், ஆங்கிலம், இந்தி மொழிகளில் பெயர் பலகை வைக்கப்பட்டிருக்கும் புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “*Controli மவனுகளா என்னடா இதெல்லாம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த புகைப்படத்தைப் பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். உண்மை அறிவோம்: டெல்லியில் உள்ள பெரியார் […]

Continue Reading

வால்நட் சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் கரையுமா?

வால்நட் பருப்பை தினமும் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கற்கள் கரையும் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நியூஸ் கார்டு டைப்பில் மருத்துவக் குறிப்பை பகிர்ந்துள்ளனர். அதில், “பித்தப்பையில் கற்கள். வால்நட் பருப்பை தினமும் ஊற வைத்து சாப்பிட கற்கள் படிப்படியாக கரையும். குறிப்பாக வலியின்றி கற்களை உடலில் இருந்து வெளியேற்றி விடும்” என்று […]

Continue Reading

அமித்ஷாவை மிரட்டி அமர வைத்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி என்று பரவும் வீடியோ உண்மையா?

நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை மிரட்டி அமர வைத்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி காகோலி கோஷ் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நாடாளுமன்றத்தில் எம்.பி ஒருவர் பேச அதற்கு பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் பதில் சொல்ல முடியாமல் திணறியது போன்று ஒரு வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அவர் […]

Continue Reading

பாகிஸ்தானை வீழ்த்தியதும் இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட வீடியோ இதுவா?

சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்திய போது இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) வெளியிட்ட உணர்ச்சிப்பூர்வமான வீடியோ என்று ஒரு வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இந்திய கிரிக்கெட் அணியினர் ஏ.ஆர்.ரஹ்மானின் வந்தே மாதரம் பாடலை ஸ்டேடியத்தில் பாடும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பாகிஸ்தான் அணியை வறுத்தெடுத்த பிறகு இந்திய கிரிக்கெட் […]

Continue Reading

ப்ரீத்தி ஜிந்தாவின் ரூ.18 கோடி வங்கிக் கடனை மத்திய அரசு தள்ளுபடி செய்ததா?

நடிகை ப்ரீத்தி ஜிந்தாவின் ரூ.18 கோடி கடனை மத்திய அரசு தள்ளுபடி (write-off) செய்ததாகப் பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்த தகவல் உண்மையா என்று அறிந்துகொள்ள ஆய்வு செய்தோம். பிரபல பாலிவுட் நடிகையும் ஐபிஎல் கிரிக்கெட் பஞ்சாப் அணியின் உரிமையாளருமான ப்ரீத்தி ஜிந்தா தொடர்பாக சமீபத்தில் கேரள காங்கிரஸ் எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டது. அதில், “நடிகை ப்ரீத்தி ஜிந்தா தன்னுடைய சமூக ஊடக பக்கத்தை நிர்வகிக்கும் பொறுப்பை பாஜக-வுக்கு கொடுத்து, வங்கிக் கடன் […]

Continue Reading

வனிதா விஜயகுமார் 5வது திருமணம் என்றும் பரவும் புகைப்படம் உண்மையா?

நடிகை வனிதா விஜயகுமார் ஐந்தாவது முறையாக திருமணம் செய்து கொண்டார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த தகவல் உண்மையா என்று அறிய ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நடிகை வனிதா விஜயகுமார் – நடன இயக்குநர் ராபர்ட் ஆகியோர் திருமணம் செய்துகொள்வது போன்ற புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “தனது மூன்றாவது கணவனை ஐந்தாவது கணவனாக மீண்டும் திருமணம் செய்த நடிகை.. […]

Continue Reading

கடையநல்லூர் ரயில் நிலையத்தில் ஆங்கில எழுத்தை அழித்த தி.மு.க-வினர் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

கடையநல்லூர் ரயில் நிலைய பெயர் பலகையில் இந்திக்கு பதில் ஆங்கில எழுத்தை அழித்த தி.மு.க-வினர் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கடையநல்லூர் ரயில் நிலையத்தில் தமிழ், இந்தி, ஆங்கிலம் என்று மூன்று மொழிகளில் எழுதப்பட்டிருந்த பெயர் பலகையில் ஆங்கில எழுத்துக்களை மட்டும் அழித்தது போன்று புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “ஹிந்தி மொழிய அழிச்சிட்டோம் […]

Continue Reading

டெல்லி முதல்வர் அலுவலகத்தில் இருந்து அம்பேத்கர் படம் அகற்றப்பட்டதா?

டெல்லி முதல்வர் அலுவலகத்தில் இருந்து அம்பேத்கர் மற்றும் பகத்சிங் ஆகியோரின் புகைப்படங்கள் அகற்றப்பட்டது என்று பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்தோம். டெல்லி முதலமைச்சர் அலுவலகத்தில் அதிஷி மற்றும் ரேகா குப்தா ஆகியோர் இருக்கும் புகைப்படங்களை ஒன்றாக வைத்து உருவாக்கப்பட்ட பதிவை பலரும் Facebook உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதிஷி முதல்வராக இருக்கும் போது அம்பேத்கர் மற்றும் பகத்சிங் ஆகியோரின் புகைப்படம் இருந்ததையும், ரேகா குப்தா பதவியேற்ற பிறகு […]

Continue Reading

சத்ரபதி சிவாஜியின் உண்மையான தோற்றம் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

பாலிவுட் திரைப்படங்களில் மராட்டிய மன்னன் சத்ரபதி சிவாஜியை மிகைப்படுத்திக் காட்டுவது போலவும், உண்மையில் உடல் வலிமை குறைந்தவராக அவர் இருந்தார் என்றும் ஒரு புகைப்படத்தை சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சத்ரபதி சிவாஜியின் உண்மை படம் என்று குறிப்பிட்டு புகைப்பட பதிவு ஒன்று ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. பாலிவுட்டில் மிகைப்படுத்திக் காட்டப்படுவதாக அதில் வேறு சில புகைப்படங்களையும் அதில் வைத்திருந்தனர். […]

Continue Reading

அப்பாவை மணந்த மகள் என்று பரவும் வீடியோ உண்மையா?

அப்பாவையே திருமணம் செய்துகொண்ட மகள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நடுத்தர வயதுடைய ஆண் ஒருவர் இளம் பெண்ணை திருமணம் செய்து அழைத்து வருவது போலவும், அவர்களிடம் மூன்றாவதாக ஒருவர் பேட்டி எடுப்பது போன்ற வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “24 வயது பெண் தன்னுடைய சொந்த 50 வயது தந்தையை திருமணம் செய்தார்” […]

Continue Reading

“கெட் அவுட் ஸ்டாலின்” என்று நியூஸ் கார்டு வெளியிட்டதா சன் நியூஸ்?

கெட் அவுட் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் உலக அளவில் 2வது இடத்தில் உள்ளது என்று சன் நியூஸ் தொலைக்காட்சி நியூஸ் கார்டு வெளியிட்டதாக சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சன் நியூஸ் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “X தளத்தில் உலகளவில் 2வது இடத்திலும், இந்திய அளவில் முதலிடத்திலும் ட்ரெண்டாகும் #GetOutStalin” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. […]

Continue Reading

துருக்கியில் இருந்து எகிப்துக்கு சென்ற அந்த காலத்து ரயில் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

துருக்கியில் இருந்து மெக்கா, மதினா வழியாக எகிப்து தலைநகர் கெய்ரோ வரை சென்ற ரயில் என்று ஒரு பழைய பாழடைந்த ரயில் இன்ஜின் ஒன்றின் புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பழைய கைவிடப்பட்ட ரயில் இன்ஜின்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஒரு காலத்தில்… துருக்கியே நாட்டிலிருந்து புறப்பட்டு, சிரியா ஜோர்டான் மெக்கா மெதினா ஜெரூசலம் […]

Continue Reading

டெல்லியில் பாஜக ஆட்சிக்கு வந்ததும் யமுனை ஆரத்தி தொடங்கப்பட்டதா?

டெல்லியில் பல ஆண்டுகள் கழித்து மீண்டும் பாஜக ஆட்சியைப் பிடித்ததைத் தொடர்ந்து யமுனை நதிக்கு ஆரத்தி காட்டுவது மீண்டும் தொடங்கப்பட்டது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஆற்றுக்கு ஆரத்தி எடுத்த வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “டெல்லியில் பாஜக ஆட்சி 27 ஆண்டுகளுக்குப் பிறகு அமைந்ததைத் தொடர்ந்து யமுனை ஆற்றங்கரையில் யமுனா ஆரத்தி மீண்டும் தொடங்கியது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். உண்மை அறிவோம்: […]

Continue Reading

கிராமத்தை அழித்து நடிகர் விஜய் கட்டிய பள்ளிக்கூடம் என்று பரவும் புகைப்படங்கள் உண்மையா?

அழகிய பசுமையான கிராமத்தை அழித்து நடிகரும் தவெக தலைவருமான விஜய் கட்டிய பள்ளிக் கூடம் என்று இரண்டு புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive வயல்வெளி போன்று இருக்கும் இடம் ஒன்றின் புகைப்படம் மற்றும் பள்ளிக் கூட கட்டிடம் ஒன்றின் புகைப்படத்தை ஒன்று சேர்த்து ஒரே புகைப்படமாக சேர்த்து நடிகர் விஜய்யின் பள்ளி அமைவதற்கு முன்பு, கட்டிய பிறகு என்று […]

Continue Reading

“அண்ணாமலைக்கு விஜயகாந்த் நிலைதான் ஏற்படும்” என்று ஜவாஹிருல்லா எச்சரிக்கை விடுத்தாரா?

அண்ணாமலைக்கு நாவடக்கம் தேவை இல்லை என்றால் விஜயகாந்த்துக்கு ஏற்பட்ட கதிதான் ஏற்படும் என்று மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும் எம்.எல்.ஏ-வுமான ஜவாஹிருல்லா கூறியது போன்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நியூஸ் 18 தமிழ்நாடு வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “எச்சரிக்கை. ஆட்டு குட்டி அண்ணா மலைக்கு நாவடக்கம் தேவை. […]

Continue Reading

கும்பமேளாவில் அமைக்கப்பட்ட கழிப்பறை என்று பரவும் வீடியோ உண்மையா?

கும்பமேளாவில் ரூ.4000 கோடி செலவில் அமைக்கப்பட்ட தற்காலிக கழிப்பறையின் நிலை என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive வரிசையாகக் கழிப்பறை கோப்பைகள் அமைக்கப்பட்டிருக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. எந்த மறைவும் இன்றி, வரிசையாக இந்த கழிவறை கோப்பைகள் அமைக்கப்பட்டுள்ளன. நிலைத் தகவலில், “4000 கோடி செலவில் உலகமே வியக்கும் பாத்ரூம் வசதியை கும்பமேளாவில் செய்த எங்கள் […]

Continue Reading

“ஜெயலலிதாவின் நகைகளை மத்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும்” என்று அண்ணாமலை கூறினாரா?

ஜெயலலிதாவின் நகை, சொத்துக்களை மத்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக ஒரு நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அண்ணாமலை புகைப்படத்துடன் நியூஸ் 7 தமிழ் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நகை சொத்துக்களை […]

Continue Reading

டெல்லியில் வெற்றி பெற்றதும் பாஜக மெட்ரோ கட்டணத்தை உயர்த்தியதா?

டெல்லி சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற உடன் டெல்லி மெட்ரோ கட்டணத்தை ரூ.60 முதல் 90 வரை உயர்த்திய பாஜக என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ‘டெல்லி மக்களுக்கு நல்ல நாள் முதல் பரிசு நண்பர்களே..!! மெட்ரோ கட்டணம் ₹60முதல் ₹90 வரை உயர்வு மகளிர் இலவச பேருந்து சேவை மூடல் 😄” என்று ஃபேஸ்புக்கில் […]

Continue Reading

‘இந்தி தெரிந்தால்தான் இந்தியன்’ என்று அண்ணாமலை கூறியதாக பரவும் நியூஸ் கார்டு உண்மையா?

இந்தி தெரிந்தால்தான் இந்தியன் என்று அண்ணாமலை கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை புகைப்படத்துடன் தினமலர் நாளிதழ் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “இந்தி தெரிந்தால்தான் இந்தியன் – அண்ணாமலை. இந்திதான் இந்தியாவின் மூத்த மொழி. இந்தி தெரியாதவர்கள் இந்தியர்களே அல்ல. தமிழ்நாட்டைத் தாண்டினால் தமிழில் […]

Continue Reading

வக்ஃப் சொத்துகளை இந்து அறநிலையத்துறை ஆக்கிரமித்துள்ளது என்று பரவும் நியூஸ் கார்டு உண்மையா?

இந்து அறநிலையத் துறை, இந்து மடங்கள், கோயில்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வக்ஃப் போர்டு நிலங்கள் மீட்கப்படும் என்று எஸ்டிபிஐ கட்சி தமிழ்நாடு தலைவர் நெல்லை முபாரக் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நியூஸ் 18 தமிழ்நாடு வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “முபாரக் செய்தியாளர் சந்திப்பு. இந்து அறநிலதுறை மற்றும் மடங்கள், […]

Continue Reading

கும்பமேளாவில் ஜோதிர் மட சங்கராச்சாரியாரை தாக்கிய உ.பி  பாஜக அரசு என்று பரவும் வீடியோ உண்மையா?

கும்பமேளாவில் குளிக்கச் சென்ற சங்கராச்சாரியார் அவிமுக்தேஷ்வரானந்தை காவல் துறையை விட்டு உத்தரப்பிரதேச பாஜக அரசு தாக்கியது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive உத்தரகண்ட் மாநிலம் ஜோதிர் ( அல்லது ஜோஷி) சங்கர மடத்தின் தலைவராக இருப்பவர் சுவாமி அவிமுக்தேஷ்வரானந்தா. இவரை போலீசார் தாக்கும் வீடியோவை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். நிலைத் தகவலில், “கும்பமேளாவுக்கு குளிக்கச் சென்ற […]

Continue Reading

சிக்கந்தர்மலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று வக்ஃபு போர்டு தலைவர் கூறினாரா?

திருப்பரங்குன்றம் மலை வக்ஃப் போர்டுக்கு சொந்தமானது என்றும், அங்குள்ள ஆக்கிரமிப்பை (முருகன் கோவிலை) அகற்ற வேண்டும் என்று வக்ஃப் போர்டு தலைவர் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “வக்ஃ போர்டு தலைவரின் சர்ச்சை பேச்சு. வக்ஃ போர்டுக்கு சொந்தமான சிக்கந்தர்மலை மீது […]

Continue Reading

நடிகர் கார்த்தியிடம் திரள் நிதி கேட்ட சீமான் என்று பரவும் வீடியோ உண்மையா?

நடிகர் கார்த்தியிடம் திரள் நிதி கேட்டு சீமான் மிரட்டியது போன்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நடிகர் கார்த்திக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போன் செய்து திரள் நிதி கேட்பது போன்றும், சீமான் ஒரு சீட்டிங் ஆசாமி என்று நடிகர் கார்த்தியின் மனசாட்சி கூறுவது போலவும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், […]

Continue Reading

சேலம் எம்.பி திமுகவில் இருந்து விலகலா?

சேலம் தி.மு.க எம்.பி அக்கட்சியில் இருந்து விலகினார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் தகவல் ஒன்று பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக நாம் ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive எக்ஸ் தளத்தில் யாரோ வெளியிட்டிருந்த விலகல் அறிவிப்பு ஒன்றுடன் கூடிய பதிவை ஸ்கிரீன்ஷாட் எடுத்து ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. அதில், “சேலம் MP திமுகவில் இருந்து விலகல்.. பேரனுக்கு பேனர் வைக்கவும் போஸ்டர் ஒட்டும் நிலை வெகு தொலைவில் […]

Continue Reading

பள்ளி, கல்லூரி அருகே விற்கப்படும் பொம்மை வடிவிலான போதைப் பொருள் இதுவா?

தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே பொம்மை வடிவில் போதைப் பொருள் ஒன்று விற்கப்படுவதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பிங்க் நிறத்தில் குட்டி டெடி பியர் வடிவிலான பொம்மை ஒரு பிளாஸ்டிக் உறையில் போடப்பட்டிருக்கும் புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். நிலைத் தகவலில், “உஷார்…உஷார்… புதிய போதைப்பொருள் பள்ளிகளில்… உங்களிடம் பள்ளியில் படிக்கும் குழந்தைகள் இல்லாவிட்டாலும் மற்றவர்களுக்காக பாசத்திற்குரிய […]

Continue Reading

தி.மு.க ஆட்சியில் நடக்கும் ரேஷன் கடை முறைகேடு என்று பரவும் வீடியோ உண்மையா?

தி.மு.க ஆட்சியில் ரேஷன் கடையில் அரிசி விற்பனையில் முறைகேடு நடக்கிறது என்று ஒரு வீடியோவை அதிமுக-வினர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: threads.net I Archive ரேஷன் கடையில் அரிசியை எடை போடும் போது எடைக் கல்லை வைத்து ரேஷன் கடை ஊழியர் முறைகேடு செய்யும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “விடியா திமுகமாடல் ரேஷன் கடை” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. உண்மைப் பதிவைக் காண: […]

Continue Reading

நாதக-வில் இருந்து சாட்டை துரைமுருகன் விலகல் என்று பரவும் நியூஸ் கார்டு உண்மையா?

நாதக-வில் இருந்து சாட்டை துரைமுருகன் விலகியதாக ஒரு நியூஸ் கார்டை சிலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சன் நியூஸ் வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “விலகல். நாதக மாநில ஒருங்கிணைப்பாளர் சாட்டை துரைமுருகன் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவிப்பு. வலதுசாரிகளின் வழிகாட்டுதலில் தமிழுக்கும், தமிழ் தேசியத்திற்கும் சீமான் துரோகம் செய்து வருவதாக அவர் அறிக்கை” […]

Continue Reading

சிகரெட் வாங்கும் பணத்தை சேமித்து கார் வாங்கியவர், விபத்தில் உயிரிழந்தாரா?

சிகரெட் பிடிக்கும் பழக்கத்தை நிறுத்தி சிகரெட் வாங்க ஆன பணத்தை சேர்த்து வைத்து கார் வாங்கியவர், கார் விபத்தில் உயிரிழந்தார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மேஜை முழுக்க நாணயங்கள், பணத்துடன் அடுக்கி வைத்தபடி ஒருவர் அதன் முன்பு இருந்து போஸ் கொடுத்த புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “இந்த மனிதன் கடந்த 6 வருடமாகப் […]

Continue Reading

‘விடுதலைக்காகப் போராடியது ஆர்.எஸ்.எஸ்’ என்று சீமான் கூறியதாக பரவும் செய்தி உண்மையா?

விடுதலைக்காகப் போராடிய இயக்கம் ஆர்.எஸ்.எஸ் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சீமான், சாவர்க்கர் புகைப்படங்களுடன் புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “விடுதலைக்காக போராடியது ஆர்.எஸ்.எஸ் இயக்கம்! இந்தியாவின் விடுதலைக்காக போராடியது ஆர்.எஸ்.எஸ் இயக்கம் ஆனால், சுதந்திர தினத்தை கருப்பு […]

Continue Reading

கும்பமேளாவில் நீராடிய பிரகாஷ் ராஜ் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

சனாதன தர்மத்திற்கு எதிரான கருத்துக்களைத் தெரிவித்த நடிகர் பிரகாஷ் ராஜ் தற்போது பிரயாக்ராஜ் கும்பமேளாவில் பங்கேற்று புனித நீராடினார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நடிகர் பிரகாஷ் ராஜ் நதியில் நீராடுவது போன்று புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “கர்த்தரே..இவனை எதுக்கு கும்ப மெளாவுக்கு அனுப்பி வச்ச நீ எங்கய்யா..இங்க?” என்று இருந்தது. நிலைத் […]

Continue Reading

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் திடீரென்று தோன்றிய தர்கா என்று பரவும் வீடியோ உண்மையா?

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் கடந்த ஓராண்டுக்குள்ளாக திடீரென்று மசூதி ஒன்று கட்டப்பட்டுள்ளது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தெலுங்கில் ஒருவர் பேசி வெளியிட்ட வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில் அவர், “மஸ்ஜித் இன் அருணாச்சலம் டெம்பிள். இது அருணாச்சலம் கோவில். எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை, திடீரென்று மசூதி வந்துள்ளது, கடந்த ஓராண்டில்” என்று குறிப்பிடுகிறார். நிலைத் […]

Continue Reading

கும்பமேளாவுக்கு வந்த 154 வயதான துறவி என்று பரவும் வீடியோ உண்மையா?

பிரயாக்ராஜ் கும்பமேளாவில் பங்கேற்க வந்த 154 வயதான துறவி என்று வயதான துறவி ஒருவரின் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive வயதான துறவி ஒருவர் வழிபாட்டில் ஈடுபட்ட வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இமயமலையில் இருந்து கும்ப மேளாவிற்கு வருகை புரிந்த 154 வயது துறவி” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். […]

Continue Reading

கும்பமேளாவில் சங்கு ஊதி உலக சாதனை என்று பரவும் தகவல் உண்மையா?

கும்பமேளாவில் 2.49 நிமிடங்கள் தொடர்ந்து சங்கு முழங்கி உலக சாதனை நிகழ்த்தப்பட்டது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஒருவர் சங்கு ஒலி எழுப்பும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உள்ளிட்டவர்கள் அமர்ந்து அதைக் கவனிக்கின்றனர். நிலைத் தகவலில், “Wow!!!!!!! கும்பமேளாவில்…  சங்கு முழங்குவதில் *முதல் உலக சாதனை!* 🎯 தொடக்க […]

Continue Reading

‘தி ராக்’ டுவைன் ஜான்சன் உள்ளிட்டோர் கும்பமேளாவில் பங்கேற்றனரா?

ஹாலிவுட் நடிகரும் WWE பிரபலமுமான தி ராக் டுவைன் ஜான்சன் உள்ளிட்ட மல்யுத்த வீரர்கள் கும்பமேளாவில் பங்கேற்றது போலவும், அவர்களிடம் சனாதனம் குறித்து பேச பெரியாரிய ஆதரவாளர்களுக்குத் தைரியம் உள்ளதா என்று கேட்டு ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive WWE, ஹாலிவுட் பிரபலங்கள் எல்லாம் காவி உடை அணிந்து, கையில் ஜெய் ஶ்ரீராம் கொடியுடன் கும்பமேளாவில் பங்கேற்றது போன்று […]

Continue Reading

கும்பமேளா தீ விபத்து; சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட அயூப் கான் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

கும்பமேளா தீ விபத்து தொடர்பான வழக்கில் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட அயூப் கான் என்று ஒரு புகைப்பட பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சாமியார் ஒருவரை இரண்டு போலீஸ்காரர்கள் கைகளில் கயிற்றைக் கட்டி, துப்பாக்கி முனையில் ஆற்றிலிருந்து அழைத்து வருவது போன்று புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இந்த சாமியார் “அயூப் கான்”. லட்சக்கணக்கான […]

Continue Reading

மோடியின் ராஜதந்திரத்தால் சர்வதேச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இந்தியர் தேர்வு என்ற தகவல் உண்மையா?

பிரதமர் நரேந்திர மோடியின் ராஜதந்திரம் காரணமாக சர்வதேச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இந்தியாவின் தல்வீர் பண்டாரி தேர்வு செய்யப்பட்டார் என்று தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தை வைத்து ஃபேஸ்புக்கில் பதிவு இடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “*பிரேக்கிங் நியூஸ்* சர்வதேச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தேர்தல். இந்தியாவுக்கு மிகப்பெரிய வெற்றி. பிரதமர் மோடியின் சாணக்கிய […]

Continue Reading

கயல்விழி சீமானின் முதல் மகன் யார்?

பெரியார் பற்றி சீமான் பேசியதற்கு பெரியாரிய உணர்வாளர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சீமானின் வீட்டை முற்றுகையிட முயன்றனர். அப்போது என்ன நடக்கிறது என்று வீட்டு வாசலுக்கு சீமானின் பெரிய மகன் வந்து பார்த்த வீடியோ செய்தி ஊடகங்களில் வெளியானது. இந்த நிலையில், அந்த சிறுவனின் தாயார் கயல்விழி என்றும், கயல்விழியின் முதல் கணவருக்கு பிறந்த மகன் என்றும் சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். Archive சீமானுக்கு 2013ம் ஆண்டு கயல்விழியுடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2019ம் […]

Continue Reading

இந்தியாவின் முதல் பெண் போர்ட்டர் என்று பரவும் தகவல் உண்மையா?

கணவன் உயிரிழந்த நிலையில் குடும்பத்தைக் காக்க, கேரள பெண் ரயிலில் சுமை தூக்கும் தொழிலாளியாக மாறினார் என்றும் அவர் தான் இந்தியாவின் முதல் பெண் போர்ட்டர் என்றும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பெண் ஒருவர் ரயில் நிலையத்தில் பயணிகளின் உடைமை சுமைகளை சுமந்து வரும் புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “கணவர் இறந்த பிறகு […]

Continue Reading

கும்பமேளாவில் பங்கேற்ற மற்ற மாநில சினிமா பிரபலங்கள் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

தமிழ்நாட்டுத் திராவிட நடிகர்களைப் போல இல்லாமல் கும்பமேளாவில் பங்கேற்ற மற்ற மாநில திரைப்பட நடிகர்கள் என்று சில புகைப்படங்களைப் பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தெலுங்கு, இந்தி நடிகர்கள் கும்பமேளாவில் பங்கேற்றது போன்ற ஏஐ புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “உத்தர பிரதேஷ் மாநிலம் பிராயக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில் மற்ற மாநிலங்களில் உள்ள சினிமா […]

Continue Reading