மேற்கு வங்கத்தில் கலவரம் செய்த முஸ்லீம்கள் ராணுவத்திடம் சிக்கிய காட்சி இதுவா?

அரசியல் சார்ந்தவை | Political இந்தியா | India

‘’ மேற்கு வங்கத்தில் கலவரம் செய்த முஸ்லீம்கள் ராணுவத்திடம் சிக்கிய காட்சி,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். 

இதில், ‘’மப்பு பானர்ஜியோட போலீஸ் வர்றதாதான்டா பேச்சி??? இப்படி திடுதிப்புனு ஆர்மி வந்தா என்ன அர்த்தம்? அரீ குல்லா கூ குக்கர்….

மேற்கு வங்காளத்தில் இந்துக்களை காக்கும் Indian Army,’’ என்று எழுதப்பட்டுள்ளது. 

Claim Link 1 l Claim Link 2 

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர். 

உண்மை அறிவோம்:

மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது கடந்த 2024ம் ஆண்டு வங்கதேசத்தில் நிகழ்ந்த சம்பவம், என்று தெரியவந்தது. 

இதன்படி, வங்கதேசத்தில் உள்ள ஃபரிதாபாத்தில் இரு கட்சியினர் இடையே தகராறு ஏற்பட்டதாகவும், அதில் ஒரு கட்சியினர் மற்ற கட்சியினர் வீட்டை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. அந்த நேரத்தில் ராணுவம் அங்கே வந்ததால் அவர்கள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். 

கூடுதல் செய்தி ஆதாரம் இதோ…

Link 1 l Link 2 l Link 3 

மேலும், நமது இந்தி மொழி பிரிவினரும் இதுதொடர்பாக, ஏற்கனவே விரிவான ஃபேக்ட்செக் வெளியிட்டுள்ளனர். அதனையும் கீழே ஆதாரத்திற்காக இணைத்துள்ளோம். 

Fact Crescendo Hindi Link  

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட வீடியோவுக்கும், மேற்கு வங்கத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று, சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram 

Avatar

Title:மேற்கு வங்கத்தில் கலவரம் செய்த முஸ்லீம்கள் ராணுவத்திடம் சிக்கிய காட்சி இதுவா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False

Leave a Reply