
‘’நீயெல்லாம் ஒரு தலைவனா?,’’ என்று விஜய் பற்றி இயக்குனர் சேரன் கேள்வி கேட்டதாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ “எத்தனை திமுக எம்எல்ஏ-க்கள் வர்றீங்களோ வாங்க, தோல உரிச்சு தொங்க விட்ருவேன்”
– ஆந்திர துணைமுதல்வர் பவன் கல்யாண் அவர்கள்⚡🔥,’’ என்று எழுதப்பட்டுள்ளது.
பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது.

உண்மை அறிவோம்:
மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். இதன்படி, நடிகர் விஜய் கரூர் சென்றபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பலியான நபர்கள், காயமடைந்தவர்களுக்கு சரியான ஆறுதல் வழங்கப்படவில்லை, என்று இயக்குனர் சேரன் ஆதங்கம் தெரிவித்தார்.
,
இயக்குனர் சேரனின் X பதிவுக்கு, விஜய் ஆதரவாளர்கள் மறுத்து பேசவே, அதற்கும் சேரன் மறுவிளக்கம் அளித்தார்.

ஆனால், சேரன் கூறிய கருத்தை பலரும் சமூக வலைதளங்களில் தவறான அர்த்தத்தில் திரித்து பரப்புகிறார்கள். அதில் ஒன்றுதான் நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட செய்தியும்…
ஆம், இதற்கு சேரன் உடனடியாக, மறுப்பு தெரிவித்துள்ளார்.

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட தகவல் தவறானது, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Title:‘நீயெல்லாம் ஒரு தலைவனா’ என்று விஜய் பற்றி இயக்குனர் சேரன் கேள்வி கேட்டாரா?
Fact Check By: Pankaj IyerResult: False
