காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த வீடுகள் மீது இந்திய ராணுவம் குண்டு வீசிய காட்சி இதுவா?

அரசியல் சார்ந்தவை | Political இந்தியா | India

‘’காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த வீடுகள் மீது இந்திய ராணுவம் குண்டு வீசிய காட்சி’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். 

இதில், ‘’ தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த அமைதி மார்க்கத்தினரின் வீடுகள் எல்லாம் வெடி வைத்து தகற்கப்படுகிறது…

ஜெய்ஸ்ரீராம் 🔥,’’ என்று எழுதப்பட்டுள்ளது. 

Claim Link 1 l Claim Link 2 l Claim Link 3 

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர். 

உண்மை அறிவோம்:

மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, குறிப்பிட்ட வீடியோ கடந்த 2021ம் ஆண்டு எடுக்கப்பட்டது, என்று தெரியவந்தது. 

இதன்படி, கடந்த 2021ம் ஆண்டு ஜம்மு காஷ்மீரின் தெற்கே அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள Kokernag பகுதியில் உள்ள Vailoo என்ற இடத்தில் லஷ்கர் இ தொய்பா என்ற தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த சிலர் ஒரு வீட்டில் தங்கியுள்ளதாக, பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. 

இதன்பேரில், அவர்களை சுற்றி வளைத்த பாதுகாப்புப் படையினர் ஒருகட்டத்தில், தீவிரவாதிகள் தங்கியிருந்த வீட்டின் மீது குண்டுவீசினர். தப்பியோட முயன்ற தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றனர். 

கூடுதல் செய்தி ஆதாரம் இதோ…

Times Of India l India Today l The Hindu 

இதுபற்றி காஷ்மீர் போலீஸ் வெளியிட்ட X வலைதள பதிவையும் கீழே இணைத்துள்ளோம். 

அடுத்தப்படியாக, சமீபத்தில் ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் தீவிரவாதிகள் மீது எங்கேயும் குண்டு வீசினார்களா என்று தகவல் தேடினோம். இதன்படி, பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு, சில தீவிரவாதிகளின் வீடுகளை புல்டோசர் மூலமாக, பாதுகாப்புப் படையினர் இடித்து தகர்த்துள்ளதாக, விவரம் கிடைத்தது. 

செய்தி ஆதாரம் இதோ…

Times Of India l The Hindu 

எனவே, 2021ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வீடியோவை எடுத்து, புதியது போல தற்போது பரப்புகிறார்கள், என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த வீடுகள் மீது இந்திய ராணுவம் குண்டு வீசிய காட்சி இதுவா?

Written By: Pankaj Iyer 

Result: Misleading

Leave a Reply