
பாஜக கூட்டணியில் இருப்பதால் எங்கள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனைகள் நடைபெறுவது இல்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
எடப்பாடி பழனிசாமி புகைப்படத்துடன் கூடிய நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “நாங்கள் பாஜகவுடன் கூட்டணியில் இருக்கிறோம்; அதனால்தான் எங்கள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடப்பதில்லை – அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த பதிவை கண்டியூர் பிரசன்னா என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 ஜூலை 19ம் தேதி பதிவிட்டிருந்தார். இவரைப் போலப் பலரும் இந்த நியூஸ் கார்டை பகிர்ந்த வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
இந்த நியூஸ் கார்டின் டிசைன், தமிழ் ஃபாண்ட் வழக்கமாக ஏபிபி நாடு வெளியிடும் நியூஸ் கார்டில் உள்ளது போல் இல்லை. எனவே, இது போலியானது என்பது தெளிவாகத் தெரிகிறது.
இதை உறுதி செய்துகொள்ள ஏபிபி நாடு வெளியிட்ட நியூஸ் கார்டுகளை அதன் ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கங்களில் தேடிப் பார்த்தோம். அதில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்று எந்த நியூஸ் கார்டும் இல்லை. எனவே, இந்த நியூஸ் கார்டை ஏபிபி நாடு டிஜிட்டல் பிரிவு நிர்வாகிக்கு அனுப்பினோம். அவர், இந்த நியூஸ் கார்டு போலியானது, என்று உறுதி செய்தார். மேலும், இந்த நியூஸ் கார்டை நாங்கள் வெளியிடவில்லை என்று குறிப்பிட்டுப் பதிவு ஒன்றையும் அவர்கள் வெளியிட்டனர்.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில் பாஜக கூட்டணியில் இருப்பதால் எங்கள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனைகள் நடைபெறுவது இல்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
நாங்கள் பாஜகவுடன் கூட்டணியில் இருக்கிறோம்; அதனால்தான் எங்கள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடப்பதில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:பாஜக கூட்டணியில் இருப்பதால் அமலாக்கத்துறை சோதனை நடப்பதில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறினாரா?
Written By: Chendur PandianResult: False
