
‘’திண்டுக்கல் ஐ. லியோனி மரணம்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’கண்ணீர் அஞ்சலி. மறைவு: 26.08.2023 திமுக கட்சி ஆபாச பேச்சாளர் சின்னத்திரை நடிகர் திண்டுக்கல் ஐ. லியோனி அகால மரணம் அடைந்தார் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்… திண்டுக்கல் லியோனி நலம் விரும்பிகள்,’’ என்று எழுதப்பட்டுள்ளது.
பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது.

உண்மை அறிவோம்:
மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது கடந்த 2023ம் ஆண்டு முதலாக, சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் வதந்தி, என்று தெரியவந்தது.

அரசியல் உள்நோக்கத்துடன் திண்டுக்கல் ஐ. லியோனியை குறிவைத்து பல ஆண்டுகளாகவே, இவ்வாறு வேண்டுமென்றே வதந்தி பரப்பப்படுவதாக, அவரது குடும்பத்தினர் வேதனை தெரிவித்தனர்.
கூடுதல் ஆதாரத்திற்காக, திமுக ஐ.டி., பிரிவிலும் பேசி, உறுதிப்படுத்தியுள்ளோம்.
ஏற்கனவே கடந்த 2016ம் ஆண்டு இதுபோன்று ஒரு வதந்தி பரவிய நிலையில் அப்போது லியோனி போலீஸ் புகார் செய்ததும் குறிப்பிடத்தக்கது.
News 7 Tamil l Puthiyathalaimurai TV
எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட தகவல், ஒரு அடிப்படை ஆதாரமற்ற வதந்தி, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Title:திண்டுக்கல் ஐ. லியோனி மரணம் என்று பரவும் தகவல் உண்மையா?
Fact Check By: Pankaj IyerResult: False
