‘’இட ஒதுக்கீட்டை நம்பி நான் வரல, என்னோட திறமையில்தான் வந்தேன்,’’ என்று கூறி இளையராஜா பேசியதாக, சமூக வலைதளங்களில் ஒரு செய்தி பரவுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இந்த நியூஸ் கார்டை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா எனக் கேட்டார். இதன்பேரில் நாம் தகவல் தேடியபோது பலரும் உண்மை என நம்பி ஃபேஸ்புக் போன்றவற்றில் ஷேர் செய்வதைக் கண்டோம்.

Facebook Claim Link I Archived Link

உண்மை அறிவோம்:
இளையராஜா சமீபத்தில் இட ஒதுக்கீடு பற்றி எங்கேயும் பேசவில்லை. அவர் மோடிக்கு ஆதரவாகப் பேசியதும், அதனை விமர்சித்து பலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டதும் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

இந்த சூழலில், இட ஒதுக்கீட்டை விமர்சித்து இளையராஜா பேசியதாக, மேற்கண்ட செய்தி குமுதம் லோகோவுடன் பரவுகிறது. இதுபற்றி நாம், குமுதம் டிஜிட்டல் பிரிவை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டபோது, ‘’இளையராஜாவின் பழைய நேர்காணல் ஒன்றை அடிப்படையாக வைத்து இப்படி ஒரு தவறான செய்தியை நாங்கள் வெளியிட்டது உண்மைதான். ஆனால், அவர் எங்கேயும் அப்படி பேசவில்லை என தெரியவந்ததும், நாங்கள் வெளியிட்ட நியூஸ் கார்டை எங்களது சமூக வலைதள பக்கங்களில் இருந்து அகற்றிவிட்டோம். ஆனால், சாமானிய ஃபேஸ்புக் பயனாளர்கள் அதனை இன்றளவும் பகிர்ந்து வருகிறார்கள்,’’ என்றனர்.
குமுதம் பெயரில் வெளியிடப்பட்டு, பின்னர் நீக்கப்பட்ட அந்த பதிவின் ஸ்கிரின்ஷாட்டை கீழே இணைத்துள்ளோம்.

இதுதவிர, இளையராஜா தனது திறமை பற்றி பேசிய தனியார் நிகழ்ச்சி ஒன்றின் முழு வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.

எனவே, திறமையை நம்பி மட்டுமே சினிமா உலகிற்கு வந்தேன் என்று இளையராஜா 2018ல் ஒரு நிகழ்ச்சியில் பேசியதை எடுத்து, தவறான அர்த்தத்தில், இட ஒதுக்கீட்டால் வரவில்லை என்று அவர் குறிப்பிட்டதாகக் கூறி வதந்தி பரப்பியுள்ளனர் என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Avatar

Title:இட ஒதுக்கீட்டை நம்பி நான் வரல… இளையராஜா பெயரில் பொய்ச் செய்தி வெளியிட்ட குமுதம்!

Fact Check By: Fact Crescendo Team

Result: False