
‘’ஈஷா அறக்கட்டளை யோகா மையத்திற்கு அடிக்கல் நாட்டியவர் கருணாநிதிதான்,’’ என்று குறிப்பிட்டு, சமூக வலைதளங்களில் பகிரப்படும் புகைப்படம் ஒன்று பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் சிலர் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதன்பேரில் தகவல் தேடியபோது பலரும் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றில் இந்த செய்தியை உண்மை போல பகிர்வதைக் கண்டோம்.
Facebook Claim Link l Archived Link
உண்மை அறிவோம்:
கோவையில் ஈஷா அறக்கட்டளை தொடங்கப்பட்ட ஆண்டு கடந்த 1992 ஆகும். அப்போது தமிழ்நாட்டில் அதிமுக சார்பாக, ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தார்.

இந்த சூழலில், ’ஈஷா அறக்கட்டளை யோகா மையத்திற்கு அடிக்கல் நாட்டியவர் கருணாநிதிதான்,’ என்று பலரும் தகவல் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மையில், இந்த புகைப்படம், 2006ம் ஆண்டு கருணாநிதி தமிழ்நாடு முதலமைச்சராக இருந்தபோது, ஈஷா அறக்கட்டளை சார்பாக நடத்தப்பட்ட மரக்கன்று நடும் மாரத்தான் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தபோது, எடுத்ததாகும். அதன் ஒரு பகுதியாக, சென்னை கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி இல்லத்தில் ஜக்கி வாசுதேவ் முன்னிலையில் மரக்கன்று நடப்பட்டது. இதுபற்றி அப்போதே ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

இந்த செய்தியை எடுத்து, முழு விவரத்தை வெட்டிவிட்டு, புகைப்படத்தை மட்டும் வைத்து, புதியதாக வதந்தி பரப்புகிறார்கள் என்று உறுதி செய்யப்படுகிறது.
இதுபற்றிய புகைப்படம், The Hindu இணையதளத்தில் விற்பனைக்குக் கிடைக்கிறது.

இதுதவிர, இந்த நிகழ்வு தொடர்பான மேலும் சில புகைப்படங்களையும் சேர்த்து வதந்தி பரப்புகிறார்கள்.
கூடுதல் ஆதாரத்திற்காக நாம் இதுபற்றி ஈஷா யோகா மையம் மற்றும் திமுக ஐடி., பிரிவு தரப்பிலும் பேசி உறுதி செய்துள்ளோம்.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Title:ஈஷா அறக்கட்டளை யோகா மையத்திற்கு அடிக்கல் நாட்டியவர் கருணாநிதியா?
Fact Check By: Fact Crescendo TeamResult: False
