FactCheck: பத்ம சேஷாத்ரி பாலபவன் பள்ளி விவகாரத்தை ஆதரித்து எச்.ராஜா பேசியதாக பரவும் வதந்தி…

அரசியல் | Politics இந்தியா | India தமிழ்நாடு | Tamilnadu

‘’பத்ம சேஷாத்ரி பாலபவன் பள்ளியில் நிகழ்ந்த பாலியல் முறைகேட்டை ஆதரித்துப் பேசிய எச்.ராஜா,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்: 

புதிய தலைமுறை லோகோவுடன் பகிரப்பட்டுள்ள இந்த நியூஸ்கார்டை, நமது வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தார். 

இதன்பேரில், நாம் ஃபேஸ்புக்கில் தகவல் தேடியபோது, நிறைய பேர் இதனை உண்மை என்று நம்பி ஷேர் செய்வதைக் கண்டோம்.

Facebook Claim LinkArchived Link

உண்மை அறிவோம்:
சமீபத்தில், மாணவி ஒருவரிடம் ஆன்லைன் வகுப்பில் அத்துமீறி நடந்துகொண்டதாகக் கூறி, சென்னையை சேர்ந்த பத்ம சேஷாத்ரி பாலபவன் பள்ளி ஆசிரியர் குற்றச்சாட்டில் சிக்கினார். அந்த விவகாரம் அரசியல் ரீதியாகவும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

TheNewsMinute Link

இந்த விவகாரத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வரும் சூழலில், எச்.ராஜா இதனை ஆதரித்துப் பேசியதாக, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு பகிரப்பட்டு வருகிறது.

உண்மையில், இவ்வாறு எச்.ராஜா பேசியதாகக் கூறி, புதிய தலைமுறை செய்தி வெளியிட்டதா, என்று அந்த ஊடகத்தின் டிஜிட்டல் பிரிவு நிர்வாகி சரவணனை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டோம். ‘’இப்படி எச்.ராஜா பேசியதாக நாங்கள் எந்த செய்தியும் வெளியிடவில்லை. இது எங்களது பெயரில் பரவும் வதந்தி,’’ என்று கூறினார்.

எனவே, மேற்கண்ட நியூஸ் கார்டு, புதிய தலைமுறை பெயரில் பரவும் போலியான ஒன்று என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:பத்ம சேஷாத்ரி பாலபவன் பள்ளி விவகாரத்தை ஆதரித்து எச்.ராஜா பேசியதாக பரவும் வதந்தி…

Fact Check By: Pankaj Iyer 

Result: False