கூலிங் பீர் கேட்டு போராட்டம் நடத்தினாரா அண்ணாமலை?

Altered அரசியல் சார்ந்தவை | Political தமிழ்நாடு | Tamilnadu

‘’ கூலிங் பீர் கேட்டு டாஸ்மாக் தலைமையகத்தை முற்றுகையிடச் சென்ற அண்ணாமலை கைது,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். 

இதில், ‘’அண்ணாமலை கைது. கூலிங் பீர் கேட்டு டாஸ்மாக் தலைமையகத்தை முற்றுகையிடச் சென்ற அண்ணாமலை கைது. தலைமை அலுவலகத்தில் சரக்கு விற்பதில்லை என்று அதிகாரிகள் விளக்கம்,’’ என்று எழுதப்பட்டுள்ளது. 

Claim Link  

Polimer news லோகோ உள்ளதால், பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது வேண்டுமென்றே அண்ணாமலையை குறிவைத்து, பகிரப்படும் ஒரு எடிட் செய்யப்பட்ட நியூஸ கார்டு, என்று தெரியவந்தது. 

ஆம், பாலிமர் நியூஸ் வெளியிட்ட உண்மையான நியூஸ் கார்டு வேறொன்றாகும். 

உண்மையான நியூஸ் கார்டையும், நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட நியூஸ் கார்டையும் ஒப்பீடு செய்து, கீழே இணைத்துள்ளோம். 

இதுதொடர்பான கூடுதல் செய்தி ஆதாரம் இதோ…

BJP Tamilnadu l Chanakyaa 

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட தகவல், ஒரு எடிட் செய்யப்பட்ட நியூஸ் கார்டு, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:கூலிங் பீர் கேட்டு போராட்டம் நடத்தினாரா அண்ணாமலை?

Written By: Pankaj Iyer  

Result: Altered