FACT CHECK: கரன்சி மானிட்டரிங் பட்டியலில் இருந்து இந்தியாவை நீக்கிய அமெரிக்கா?

சமூக ஊடகம் | Social சர்வதேசம் | International

இந்திய ரூபாய் மதிப்பு மோசமாக உள்ளதால் அமெரிக்காவின் கரன்சி கண்காணிப்பு பட்டியலில் இருந்து ரூபாய் நீக்கப்பட்டது என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

மோடி படம் மற்றும் இந்திய ரூபாய் நோட்டு படத்துடன் புகைப்பட பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “மோடி அரசின் அடுத்த சாதனை. இந்திய ரூபாயின் மதிப்பு மிக மோசமாக உள்ளதால் கண்காணிப்பு பட்டியலிலிருந்து… இந்திய ரூபாயை நீக்கி அமெரிக்கா அதிரடி!” என்று கூறப்பட்டு இருந்தது.

அருள் ஷீலா என்பவர் 2020 அக்டோபர் 21ம் தேதி இந்த பதிவை ஃபேஸ்புக்கில் வெளியிட்டிருந்தார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

அமெரிக்காவின் கரன்ஸி மானிட்டரிங் லிஸ்ட் (currency monitoring list) என்பது புதிய விஷயம் போல தெரிந்தது. இந்தியாவின் ரூபாய் மதிப்பு மிக மோசமாக உள்ளதால் இந்த பட்டியலில் இருந்து இந்தியாவின் பெயரை அமெரிக்கா நீக்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். இந்தியப் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது, நாட்டின் ஜி.டி.பி வங்கதேசம், பாகிஸ்தானை விட குறைந்தது. நாட்டின் பட்டினி மக்கள் எண்ணிக்கை அதிகரித்தது என்று பல தகவல் சமூக ஊடகங்களில் பரவி வரும் நிலையில், இந்த பதிவை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டோம்.

முதலில் currency monitoring list என்பது என்ன என்று தெரிந்து கொள்ள ஆய்வு செய்தோம். ஒரு டாலருக்கு இந்திய மதிப்பு எவ்வளவு என்று தினமும் செய்திகளில் பார்க்கிறோம். உலக அளவிலான வர்த்தகத்தில் ஒவ்வொரு நாட்டின் பணமும் அமெரிக்க டாலருக்கு இணையாக எவ்வளவு மதிப்பில் உள்ளது என்று கணக்கிடப்படுகின்றன. அதிக ஏற்றுமதி லாபத்தை பெற சில நாடுகள் இதில் முறைகேடு செய்வதாகவும் இதை கண்காணிக்க அமெரிக்காவின் கருவூலத் துறை currency monitoring list / Currency manipulator என்ற பட்டியல் ஒன்றை வைத்துள்ளதாக தகவல் கிடைத்தது.

அசல் பதிவைக் காண: forbes.com I Archive 1 I theprint.in I Archive 2

இந்தியா எந்த முறைகேட்டிலும் ஈடுபடவில்லை என்பதால் 2019ம் ஆண்டு மே மாதம் இந்த பட்டியலில் இருந்து இந்தியாவின் பெயர் நீக்கப்பட்டது. இந்தியாவுடன் சேர்த்து சுவிட்சர்லாந்து பெயரும் நீக்கப்பட்டது. ஜப்பான், சீனா, தென்கொரியா, ஜெர்மனி, இத்தாலி, அயர்லாந்து, சிங்கப்பூர், மலேசியா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளின் பெயர் அந்த பட்டியலில் தொடர்ந்து நீடிக்கிறது என்றும் தகவல் கிடைத்தது.

இது தொடர்பாக தேடிய போது தமிழ் சமயம் வெளியிட்ட செய்தி கிடைத்தது. அதில், “சில நாடுகள் ஏற்றுமதி பலன்களைப் பெறுவதற்காக தங்களது நாட்டு நாணயங்களின் மதிப்புகளை கூட்டிக் குறைத்து மதிப்பிடுவது உண்டு. இதைக் கண்காணிக்க அமெரிக்கா ஒரு கண்காணிப்பு அமைப்பை வைத்துள்ளது. இந்த அமைப்பு தொடர்ந்து இதைக் கண்காணித்து வரும். 

அசல் பதிவைக் காண: samayam.com I Archive

தொடர்ந்து இந்தியா நாணய மதிப்பில் எந்த முறைகேடுகளும் செய்யவில்லை என்பதால், கண்காணிப்புப் பட்டியலில் இருந்து இந்தியாவை அமெரிக்கா நீக்கியுள்ளது.இவ்வாறு நீக்கியுள்ளது இந்தியாவுக்கு வர்த்தக ரீதியில் நன்மை பயப்பதாக இருக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்தியாவுடன் இணைந்து அமெரிக்கா வர்த்தகத்தில் ஈடுபட வாய்ப்புள்ளது” என்று குறிப்பிட்டிருந்தனர்.

அசல் பதிவைக் காண: thehindu.com I Archive

தி இந்து ஆங்கில நாளிதழில் வெளியான செய்தியில், 2018ம் ஆண்டு மே மாதம் முதன் முறையாக கரன்சி மானிட்டரிங் லிஸ்டில் இந்தியாவின் பெயரை அமெரிக்கா சேர்த்தது. குறிப்பிடத்தக்க இரு தரப்பு வர்த்த உபரி என்ற ஒரே ஒரு அளவுகோலை இந்தியா பூர்த்தி செய்வதால் இந்த பட்டியலில் இருந்து இந்தியா நீக்கப்பட்டது. இது வரவேற்கத்தக்க நிகழ்ச்சி” என்று குறிப்பிட்டிருந்தனர்.

நம்முடைய ஆய்வில்,

கரன்ஸி கண்காணிப்பு பட்டியலை அமெரிக்கா கரன்ஸி முறைகேடு கண்காணிப்பு என்று அழைக்கிறது.

அமெரிக்காவின் கரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இந்தியா 2017-18ல் சேர்க்கப்பட்டு 2019ம் ஆண்டு நீக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

ஏற்றுமதியில் முறைகேட்டைத் தடுக்க அமெரிக்க குறிப்பிட்ட நாடுகளின் பணத்தை கண்காணித்து வருவது தெரியவந்துள்ளது.

இந்தியா எந்த முறைகேட்டையும் செய்யவில்லை என்பதால் கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்தியாவின் பெயரை அமெரிக்கா நீக்கியதாக செய்திகள் கிடைத்துள்ளன.

பணம் மதிப்பீடு முறையில் நாடுகள் முறைகேடுகளில் ஈடுபடுகின்றனவா என்று கண்காணிக்கும் பட்டியலில் இருந்து இந்தியாவின் பெயர் நீக்கப்பட்டது இந்தியாவுக்கு சாதகமானது என்று பல செய்திகள் கிடைத்துள்ளன.

அதே நேரத்தில் இந்திய ரூபாயின் மதிப்பு மோசமாக உள்ளதால் நீக்கப்படவில்லை என்பதும், நாணய மதிப்பில் எந்த முறைகேட்டையும் இந்தியா செய்யவில்லை என்பதால் நீக்கப்பட்டுள்ளது என்பதும் தெரியவந்துள்ளது.

இதன் அடிப்படையில் உண்மையும் தவறான தகவலும் கலந்த பதிவாக இது உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

இந்தியா முறைகேட்டில் ஈடுபடவில்லை என்பதால் அமெரிக்க நாணய கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்தியாவின் பெயர் நீக்கப்பட்டதை தவறான தகவல் சேர்த்து சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பது தகுந்த ஆதாரத்துடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:கரன்சி மானிட்டரிங் பட்டியலில் இருந்து இந்தியாவை நீக்கிய அமெரிக்கா?

Fact Check By: Chendur Pandian 

Result: Partly False