
‘’முதல் பெண் ராணுவ வீரர் கிரண் ஷெகாவத் வீர மரணம்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:
இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ ஐயோ தாயே
உன்னை இழந்து விட்டோமே, 😭😭
முதல் பெண் ராணுவ வீரர் கிரண் ஷெகாவத் (27) வீர மரணம்..😭😭
வீர வணக்கம்.. ,’’ என்று எழுதப்பட்டுள்ளது.
இதனுடன் பெண் வீரர் ஒருவரின் சடலம் கிடப்பது போன்ற காட்சி இடம்பெற்ற ஒரு வீடியோவும் இணைக்கப்பட்டுள்ளது.
பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இந்த வீடியோவுக்கும், தற்போதைய இந்தியா – பாகிஸ்தான் மோதலுக்கும் எந்த தொடர்பும் இல்லை, என்று தெரியவந்தது.
ஆம், இது உக்ரைன் நாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ.
இதன்படி, உக்ரைன் நாட்டு ராணுவ வீரர்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட வீடியோவின் ஒரு காட்சியை தவறான தகவல் சேர்த்து, பரப்புகிறார்கள், என்று தெளிவாகிறது.
அடுத்தப்படியாக, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட பதிவில் கூறப்படுவதுபோன்று, Kiran Shekhawat தற்போது கொல்லப்படவில்லை. இந்திய கடற்படையின் முதல் பெண் அதிகாரியான அவர் கடந்த 2015ம் ஆண்டு கோவா கடற்கரை அருகே ஏற்பட்ட Dornier crash காரணமாக, வீர மரணம் அடைந்தார்.
எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட வீடியோவில் இருப்பவர் Kiran Shekhawat கிடையாது; அது உக்ரைன் நாட்டு ராணுவ வீரர்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ஒரு வீடியா என்றும், சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Title:முதல் பெண் ராணுவ வீரர் கிரண் ஷெகாவத் வீர மரணம் என்று பரவும் தகவல் உண்மையா?
Fact Check By: Pankaj IyerResult: Misleading
