
‘’தமிழன் உயிரை கொடுத்தாவது தனி தமிழ்நாடு உருவாக்குவான்,’’ என்று ஆ. ராசா கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு நியூஸ் கார்டு பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:
இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ எச்சரிக்கை..!!! தமிழன் என்று ஒரு இனம் உண்டு! அவனுக்கு என்று ஒரு குணம் உண்டு!! வேண்டிவந்தால் உயிரை கொடுத்தாவது தனி தமிழ்நாடு உருவாக்குவான்!!! – ஆர். ராசா ,’’ என்று எழுதப்பட்டுள்ளது.
மாலைமலர் லோகோ உள்ளதால், பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட நியூஸ் கார்டு உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இதுபோன்ற நியூஸ் கார்டு எதையும் மாலை மலர் ஊடகம் வெளியிடவில்லை, என்று தெரியவந்தது.
ஆம், சமீப நாட்களில் இவ்வாறு ஆ.ராசா பேசியதாக, எந்த ஊடகத்திலும் செய்தி காணப்படவில்லை. அடுத்தப்படியாக, ஆ.ராசா அலுவலகத்தை தொடர்புகொண்டு, விளக்கம் கேட்டோம். அவர்கள், இது தவறான தகவல், என்று தெரிவித்தனர்.
இறுதியாக, மாலை மலர் ஊடகத்தின் ஆசிரியர் குழுவை தொடர்புகொண்டு, இது போலியான நியூஸ் கார்டு, என்று உறுதிப்படுத்தியுள்ளோம்.
எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட நியூஸ் கார்டு மாலை மலர் பெயரில் பரவும் போலியான ஒன்று, என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Title:தமிழன் உயிரை கொடுத்து தனி தமிழ்நாடு உருவாக்குவான் என்று ஆ.ராசா கூறினாரா?
Written By: Pankaj IyerResult: False
