பிரியாணி அண்டா பத்திரம்; தமிழ் ஊடகங்களின் பெயரில் பகிரப்படும் வதந்தி…

இந்தியா | India சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

‘’பாஜக போராட்டம் நடத்துவதால் சென்னை வள்ளுவர் கோட்டம் சுற்றியுள்ள பகுதிகளில் பிரியாணி கடைகள் மூடப்படுகின்றன,’’ எனக் குறிப்பிட்டு பகிரப்படும் நியூஸ் கார்டுகள் சிலவற்றை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

தந்தி டிவி லோகோவுடன் பகிரப்பட்டுள்ள இந்த நியூஸ் கார்டில், ‘’நாளை வள்ளுவர் கோட்டத்தில் பாஜக உண்ணாவிரத போராட்டம் அறிவித்துள்ளதை தொடர்ந்து வள்ளுவர் கோட்டம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பிரியாணி கடைகள் அடைக்கப்படுகிறது. பிரியாணி அண்டாக்கள் திருடு போவதை தவிர்க்க நாளை ஒருநாள் மட்டும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது,’’ என எழுதப்பட்டுள்ளது. 24.012022 தேதியிட்டு இந்த நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளதால், இதனை பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.

Facebook Claim Link I Archived Link
இதேபோல, ஜூனியர் விகடன் லோகோவை இணைத்தும் சிலர் மேற்கண்ட வகையில் நியூஸ் கார்டு பகிர்வதைக் கண்டோம்.

Facebook Claim Link

உண்மை அறிவோம்:
தஞ்சாவூர் அருகே கிறிஸ்தவப் பள்ளியில் படித்த மாணவி லாவண்யா தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தை பாஜக கையில் எடுத்துள்ளது. இதையொட்டி, சமீபத்தில் சென்னை வள்ளுவர் கோட்டம் பகுதியில் பாஜக உண்ணாவிரத போராட்டம் நடத்தியது. 

OneIndia Tamil Link

இந்த போராட்டத்தை கேலி செய்யும் வகையில் பலரும் மேற்கண்ட வகையில், பிரியாணி பத்திரம், எனக் கூறி நியூஸ் கார்டு தயாரித்து சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர். இவை அனைத்தும் போலியானவை ஆகும்.

இதுபற்றி நாம் தந்தி டிவி, ஜூனியர் விகடன் ஆகிய ஊடகங்களின் டிஜிட்டல் பிரிவை தொடர்பு கொண்டு உறுதிப்படுத்தியுள்ளோம். இதுதவிர, மாலை முரசு ஊடகத்தின் பெயரை பயன்படுத்தியும் சிலர் இப்படியான போலிச் செய்தி தயாரித்து பகிர்ந்துள்ளனர். அதனை அந்த ஊடகமே, போலி எனவும் மறுத்துள்ளது. அதற்கான லிங்கும் கீழே இணைத்துள்ளோம்.

ஏற்கனவே, இதேபோன்ற ஒரு வதந்தி பாஜகவின் உண்ணாவிரதப் போராட்டத்தை மையமாக வைத்து பகிரப்பட்டது. அதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்து, உண்மையை வெளியிட்டிருக்கிறோம். அதனை படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

Fact Crescendo Tamil Link

எனவே, மேற்கண்ட போலிச் செய்திகளை யாரும் உண்மை என நம்பி பகிர வேண்டாம்.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel

Avatar

Title:பிரியாணி அண்டா பத்திரம்; தமிழ் ஊடகங்களின் பெயரில் பகிரப்படும் வதந்தி…

Fact Check By: Pankaj Iyer 

Result: False