ஐந்து ரூபாய் நாணயம் செல்லாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்ததா?

இந்தியா | India பொருளாதாரம் I Economy

‘’ஐந்து ரூபாய் நாணயம் செல்லாது,’’ என்று என்று ரிசர்வ் வங்கி அறிவித்ததாகக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். 

இதில், ‘’ ஐந்து ரூபாய் நாணயம் இனி செல்லாது.. RBI அதிரடி அறிவிப்பு.. ஏன் தெரியுமா? இந்தியாவில் தற்போது ரூ.1 முதல் ரூ.20 வரையிலான நாணயங்கள் புழக்கத்தில் உள்ளன. தற்போது இரண்டு வகையான 5 ரூபாய் நாணயங்கள் புழக்கத்தில் உள்ளன. ஒன்று பித்தளையால் ஆனது. மற்றொன்று தடிமனான உலோக நாணயம். இருப்பினும், தடிமனான உலோக நாணயங்களின் புழக்கம் கணிசமாகக் குறைந்துள்ளது. ஏனெனில் இந்த நாணயங்கள் உற்பத்தி அரசும், ரிசர்வ் வங்கியும் நிறுத்தி விட்டன. தடிமனான 5 ரூபாய் நாணயம் நிறுத்தப்பட்டதற்கு காரணம் அதற்கு ஆகும் செலவுதான் எனக் கூறப்படுகிறது. அதனால் 5 ரூபாய் நாணயம் மெல்லியதாக உருவாக்க அரசும், ரிசர்வ் வங்கியும் அந்த தடிமனான ஐந்து ரூபாய் நாணயத்தை நிறுத்தியுள்ளது. இனிமேல் சந்தையில் பித்தளை வகை ஐந்து ரூபாய் நாணயத்தை மட்டுமே காண முடியும்.,’’ என்று எழுதப்பட்டுள்ளது. 

Claim Link

இதனை பலரும் உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர். 

உண்மை அறிவோம்:

மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு செய்தோம். அப்போது, இதில் பாதி உண்மை, பாதி தவறான தகவல் கலந்துள்ளதாக, தெரியவந்தது. ஆம், இவர்கள் கூறுவது போன்று, 5 ரூபாய் நாணயத்தை தடை செய்வதாக, ரிசர்வ் வங்கி தரப்பில் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. 

அடுத்தப்படியாக, இந்திய அளவில் 5 ரூபாய் நாணயங்கள் பல வகைகளில் புழக்கத்தில் உள்ளன. அவற்றில், தடிமனாக உள்ள பழைய வகை ஐந்து ரூபாய் நாணயத்தின் புழக்கம் வெகுவாகக் குறைந்துள்ளதாக, ரிசர்வ் வங்கி நினைக்கிறது. குறிப்பிட்ட தடிமனான பழைய 5 ரூபாய் நாணயங்கள், பிளேடு தயாரிப்பதற்காக, வங்கதேசத்திற்கு கடத்தப்படுவதாகவும் சந்தேகம் எழுந்துள்ளது. இதுபோன்ற காரணங்களால், அந்த தடிமனான பழைய 5 ரூபாய் நாணயத்தை இனி அச்சிடுவதில்லை என்று மட்டுமே ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. 

அதேசமயம், தற்போது புழக்கத்தில் உள்ள அந்த வகை நாணயங்கள் செல்லாது என்று இதுவரை எந்த அறிவிப்பும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. அவ்வாறு நிரந்தரமாக தடை செய்ய வேண்டுமெனில், அதற்கு மத்திய அரசின் அனுமதியை ரிசர்வ் வங்கி பெற வேண்டியுள்ளது. ஒருவேளை முன்னெச்சரிக்கை அடிப்படையில் குறிப்பிட்ட தடிமனான 5 ரூபாய் நாணயம் பயன்படுத்துவதை நாம் தவிர்க்க நினைத்தால், அதில் தவறில்லை. 

இதுபற்றி நாம் ரிசர்வ் வங்கியின் சென்னை பிரிவு அலுவலகத்தை தொடர்பு கொண்டு பேசி உறுதிப்படுத்தியுள்ளோம். 

மேலும், ஊடகங்களில் வெளியான சில செய்திகளையும் கீழே ஆதாரத்திற்காக இணைத்துள்ளோம். 

News 18 l Zee News l DNA India

இதன்படி, தடிமனான ஐந்து ரூபாய் நாணயங்களின் உற்பத்திப் பணிகளை மட்டுமே ரிசர்வ் வங்கி நிறுத்தியுள்ளது. ஆனால், அவற்றின் பயன்பாட்டை இன்னமும் நிரந்தரமாக தடை செய்யவில்லை. 

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட தகவலில், பாதி உண்மை, பாதி தவறான தகவல் கலந்துள்ளதாக, சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:ஐந்து ரூபாய் நாணயம் செல்லாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்ததா?

Written By: Pankaj Iyer  

Result: Misleading