
வீட்டு வாடகை செலுத்தும் அனைவருக்கும் 18 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Twitter Claim Link I Archived Link
உண்மை அறிவோம்:
சமீபத்தில் கூடிய ஜிஎஸ்டி கவுன்சில், ‘குடியிருப்புக் கட்டிடத்தை வாடகைக்கு எடுத்து, அதில் தொழில் நடத்தும் தனி நபர் அல்லது நிறுவனம், ஜிஎஸ்டி.,யின் கீழ் பதிவு செய்திருக்கும்பட்சத்தில் அவர்கள், வாடகை செலுத்தும்போது 18 சதவீதம் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். இந்த 18 சதவீதம் வரியை வாடகைதாரர் அல்லது கட்டிட உரிமையாளர் என யாரேனும் ஒருவர் அவர்களுக்குள் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி செலுத்த வேண்டும். ஆனால், இவர்கள் தனிப்பட்ட பயன்பாட்டிற்கு குடியிருப்பை வாடகைக்கு எடுத்து ஒருவர் பயன்படுத்தும்பட்சத்தில் அதற்கு இந்த வரிவிதிப்பு பொருந்தாது,’ என்று புதிய அறிவிப்பை வெளியிட்டது.

News 18 Article Link I DNA Article Link
இதனை சிலர் தவறாகப் புரிந்துகொண்டு, வாடகைக்கு இருக்கும் அனைவருக்குமே 18 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது என்று வதந்தி பரப்பி வருகின்றனர். இந்நிலையில், இதுபற்றி மத்திய அரசின் அதிகாரப்பூர்வ ஊடக நிறுவனமான PIB FactCheck விளக்கம் அளித்திருக்கிறது. அந்த ட்வீட் லிங்க் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
எனவே, அனைத்து வாடகைதாரர்களும் 18 சதவீத ஜிஎஸ்டி செலுத்த வேண்டும் என்று குறிப்பிட்டு பகிரப்படும் தகவல் தவறானது என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Title:வீட்டு வாடகை செலுத்தும் அனைவருக்கும் 18% ஜிஎஸ்டி விதிக்கப்பட்டதா?
Fact Check By: Fact Crescendo TeamResult: Misleading
