டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா வென்றதால் ரோஹிங்கியா முஸ்லீம்கள் அழுதனரா?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social விளையாட்டு

‘’டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா வென்றது பிடிக்காமல், கதறி அழுத ரோஹிங்கியா முஸ்லீம் அகதிகள்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். 

Claim Link l Archived Link 

இதில், ‘’ ரோஹிங்கியா முஸ்லீம்களைப் பாருங்கள்… இந்தியாவிற்கு அகதியாக வந்து இந்திய சாப்பாட்டை சாப்பிடுகிறார்கள்… ஆனால் இந்தியா வெற்றியடைந்தால் அழுகிறார்கள்…’’, என்று எழுதப்பட்டுள்ளது. 

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.  

உண்மை அறிவோம்:

கடந்த ஜூன் 29, 2024 அன்று நடைபெற்ற டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில், இந்திய அணி வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. 

அதேசமயம், இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது பிடிக்காமல், இந்தியாவில் உள்ள ரோஹிங்கியா முஸ்லீம் அகதிகள் கதறி அழுததாகக் கூறி, சிலர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். 

ஆனால், இது உண்மையா என்றால், இல்லை என்பதே பதில். நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட வீடியோவின் ஒரு ஃபிரேமை பிரித்தெடுத்து, கூகுளில் பதிவேற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். அப்போது இது கடந்த ஜூன் 10, 2024 அன்று வங்கதேசத்தில் எடுக்கப்பட்ட வீடியோ என்று, விவரம் கிடைத்தது. அன்றைய நாளில் Bangladesh மற்றும் South Africa இடையே டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில், வங்கதேச அணி தோற்றதால், அந்நாட்டு ரசிகர்கள், தங்களது அதிருப்தியை வெளிப்படுத்திய காட்சிதான் இது…

Tweet Link 

இந்த வீடியோவில் உள்ள காட்சிகளை ஒப்பீடு செய்தபோது நாம் ஆய்வு செய்யும் வீடியோ காட்சிகளுடன் ஒத்துப் போவதாக உள்ளது. 

எனவே, வங்கதேசம் மற்றும் தென்னாப்ரிக்கா இடையே நடைபெற்ற டி20 கிரிக்கெட் போட்டியில் வங்கதேசம் தோல்வியடைந்ததை ஏற்றுக் கொள்ள முடியாமல் அந்நாட்டு ரசிகர்கள் புலம்பும் காட்சியை எடுத்து, ‘இறுதிப் போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றதால் ரோஹிங்கியா முஸ்லீம் அகதிகள் சோகம்’ என்று கூறி வதந்தி பரப்பியுள்ளனர். 

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட தகவல் தவறான ஒன்று என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Avatar

Title:டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா வென்றதால் ரோஹிங்கியா முஸ்லீம்கள் அழுதனரா?

Fact Check By: Fact Crescendo Team 

Result: Misleading