FACT CHECK: காலி சுவற்றில் தன்னுடைய சாதனையை உற்றுப் பார்த்தாரா மோடி?

அரசியல் | Politics இந்தியா | India சமூக ஊடகம் | Social

வெள்ளை நிற, காலியாக உள்ள சுவற்றை பிரதமர் மோடி தன்னுடைய சாதனை உற்றுப் பார்க்கிறார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் அசல் படத்தை தேடினோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

பிரதமர் மோடி வெறும் சுவற்றை உற்றுப் பார்க்கும் படத்துடன் ‘மோடி தன்னுடைய சாதனைகளைப் பார்வையிடுகிறார்’ என்று ஆங்கிலத்தில் ஒருவர் வெளியிட்ட பதிவை ஸ்கிரீன் ஷாட் எடுத்து பகிரப்பட்டுள்ளது. 

நிலைத் தகவலில், “தன் சாதனைகளை பார்வையிடும் மோடி” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பதிவை Shankar A என்பவர் 2020 நவம்பர் 16ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தீபாவளியை ஜெயல்சால்மரில் ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி செலவிட்டார். அந்த படங்களை எடிட் செய்தும், அந்த படங்களுக்கு விதவிதமான கமெண்ட்களை வைத்தும் பலரும் பதிவிட்டு வருகின்றனர். கமெண்ட் செய்வது அவர்களுடைய கருத்துச் சுதந்திரம் அதில் தலையிட முடியாது.

ஆனால், வெறும் சுவற்றை பிரதமர் மோடி உற்றுப் பார்ப்பது போல எடிட் செய்த படத்தை வெளியிட்டுள்ளனர். அதனுடன், தன்னுடைய சாதனைகளை பிரதமர் மோடி பார்வையிடுகிறார் என்று குறிப்பிட்டுள்ளனர். பலரும் இந்த படத்தை பதிவிடவே உண்மையில் என்ன நடந்தது என்பதை வெளியிட முடிவு செய்தோம்.

உண்மையில் அந்த படத்தில் என்ன இருந்தது என்பதை உறுதி செய்வதற்கான ஆய்வை நடத்தினோம். படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்த படத்தை பல செய்தி ஊடகங்கள் வெளியிட்டிருப்பதைக் காண முடிந்தது. பா.ஜ.க-வினர் பலரும் இந்த புகைப்படத்தைப் பதிவிட்டிருந்தனர். 

அசல் பதிவைக் காண: Facebook I Archive

தீபாவளியையொட்டி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி தீபாவளி கொண்டாடியதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் பிரதமர் நரேந்திர மோடியின் ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கங்களில் அசல் படம் வெளியிடப்பட்டு இருந்தது. இந்திய ராணுவத்தின் சாதனை பற்றிய கண்காட்சியை அவர் பார்வையிடுவது தெரிந்தது. 

Archive

இந்த படத்தை எடுத்து ராணுவ வீரர்கள் பற்றிய குறிப்பு உள்ள பகுதியை அகற்றிவிட்டு மோடி தன்னுடைய சாதனைகளை பார்வையிடுகிறார் என்று தவறான தகவல் சேர்த்து வெளியிட்டிருப்பது உறுதியாகிறது. 

முடிவு:

பிரதமர் மோடி ஜெய்சால்மரில் எடுத்த படத்தை எடிட் செய்து தவறான தகவல் சேர்த்து சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:காலி சுவற்றில் தன்னுடைய சாதனையை உற்றுப் பார்த்தாரா மோடி?

Fact Check By: Chendur Pandian 

Result: Altered