பாஜகவை பகைப்பது எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுகவின் எதிர்காலத்துக்கு நல்லதல்ல என்று தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

அதிமுக நிர்வாகிகள் அமித்ஷாவை சந்தித்தது மற்றும் பா.ஜ.க-வின் நாராயணன் திருப்பதியின் படத்தை ஒன்று சேர்த்து புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், "பாஜகவை பகைப்பது அதிமுக எதிர்காலத்துக்கு நல்லதல்ல. பாஜகவை பகைப்பது எடப்பாடி மற்றும் அதிமுகவின் எதிர்காலத்துக்கு நல்லதல்ல. தமிழக அரசியல் இனி பாஜக - திமுக என்று தான் இருக்கும். பாஜக தலைமையில்தான் தேர்தல் கூட்டணியும் தொகுதி பங்கீடும். தற்போதைய நிலையில் அதிமுகவுக்கு 10 சீட்டே அதிகம். அரசியலில் இருந்து அதிமுக ஓய்வு பெறுவதே சரியாக இருக்கும் - பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த பதிவை Balachandran Kesavan என்ற ஃபேஸ்புக் ஐடி-யைக் கொண்டவர் 2023 ஜூன் 12ம் தேதி பதிவிட்டிருந்தார். இவரைப் போல பலரும் இந்த நியூஸ் கார்டை பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

அதிமுக மற்றும் பாஜக தலைவர்களுக்கு இடையே மோதல் நிலவி வருகிறது. ஒருவரை ஒருவர் மாற்றி கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சியை பகைப்பது எடப்பாடி பழனிசாமியின் எதிர்காலத்துக்கு நல்லது இல்லை என்று நாராயணன் திருப்பதி கடுமையாக எச்சரிக்கை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டு வருகிறது.

இந்த நியூஸ் கார்டின் தமிழ் ஃபாண்ட் வழக்கமாக புதிய தலைமுறை வெளியிடும் நியூஸ் கார்டில் உள்ளது போல இல்லை. மேலும், பின்னணி டிசைனும் இதில் இடம்பெறவில்லை. எனவே, இது போலியான நியூஸ் கார்டு என்று தெரிந்தது. இதை உறுதி செய்ய ஆய்வு மேற்கொண்டோம்.

முதலில் இந்த நியூஸ் கார்டை புதிய தலைமுறை வெளியிடவில்லை என்பதை உறுதி செய்ய, அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியான நியூஸ் கார்டுகளை பார்வையிட்டோம். அதில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்று எந்த நியூஸ் கார்டும் இல்லை.

Archive

எடப்பாடி பழனிசாமிக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் நாராயணன் திருப்பதி கருத்து ஏதும் தெரிவித்துள்ளாரா என்று அறிய கூகுளில் சில கீ வார்த்தைகளைப் பயன்படுத்தித் தேடினோம். ஆனால், நமக்கு அப்படி எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. அடுத்து நாராயணன் திருப்பதியின் ட்விட்டர் பக்கத்தை பார்வையிட்டோம். அதில், இந்த நியூஸ் கார்டு போலியானது என்று குறிப்பிட்டு அவர் பதிவிட்டிருந்தார். இது போலி நியூஸ் கார்டு என்று நாராயணன் திருப்பதியே உறுதி செய்துவிட்டதால் மேற்கொண்டு ஆய்வு நடத்த வேண்டிய தேவையில்லாமல் போய்விட்டது. இதன் மூலம் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

பாஜக-வை பகைப்பது அதிமுக மற்றும் எடப்பாடி பழனிசாமியின் எதிர்காலத்துக்கு நல்லது அல்ல என்று நாராயணன் திருப்பதி கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் உறுதி செய்துள்ளோம். எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:பாஜகவை பகைப்பது எடப்பாடி எதிர்காலத்துக்கு நல்லதல்ல என்று நாராயணன் திருப்பதி கூறினாரா?

Written By: Chendur Pandian

Result: False