‘’தவெக., மாநாட்டுக்கு மது அருந்தி விட்டு வந்த பாண்டிச்சேரி புஸ்ஸி ஆனந்த்..!’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:


இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இந்த பதிவில் ‘’*மாநாட்டுக்கு வரும்போது மது அருந்தி விட்டு வரக்கூடாது என்று விஜய் சொன்னது தொண்டர்களுக்கு மட்டும்தான் போல,,*
*இவரு பாண்டிச்சேரி புஸ்ஸி..!
*இது நல்லாருக்கே..🥴*"’’ என்று எழுதப்பட்டுள்ளது.

Claim Link l Archived Link

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

நாம் மேற்கண்ட வீடியோ எங்கே எடுக்கப்பட்டது என்று ஆய்வு மேற்கொண்டோம். இந்த வீடியோவில் News 24x7 Tamil லோகோ உள்ளதால், முதலில் அவர்களது ஃபேஸ்புக் பக்கம் சென்று தகவல் தேடினோம்.


‘’தளபதி சொன்னபடி... பூஜை முடிந்த பின் புஸ்ஸி ஆனந்த் சொன்ன விஷயம்!#tvkparty #tvk #bussyanand #tamilagavettrikazhagam #tvkmaanadu #NewsTamil24x7 ,’’ என்ற தலைப்பில் News 24x7 Tamil வெளியிட்டுள்ள வீடியோவில் புஸ்ஸி ஆனந்த் தெளிவாகவே பேசுகிறார்.

அடுத்தப்படியாக, தவெக., செய்தித்தொடர்பாளர் லயோலா மணி, ‘’இந்த வைரல் வீடியோ தகவல் பொய்யானது,’’ என்று குறிப்பிட்டு, அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்ததை கண்டோம்.

Archived Link

எனவே, தவெக மாநாடு பந்தல் கால் நடும் நிகழ்ச்சிக்கு வந்த புஸ்ஸி ஆனந்த் போதையில் பேசவில்லை, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Claim Review :   தவெக., மாநாட்டுக்கு மது அருந்தி விட்டு வந்த பாண்டிச்சேரி புஸ்ஸி..!
Claimed By :  Social Media User
Fact Check :  ALTERED