
‘’உத்தரப் பிரதேசத்தில் ஓட்டுப் போடாமல் இருப்பதற்காக வாக்காளர்களுக்கு ரூ.500 கொடுத்த பாஜக.,வினர்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோ பதிவு ஒன்றை கண்டோம். இதுபற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:

Twitter Claim Link I Archived Link
இந்த பதிவின் கமெண்ட் பிரிவில் இதே வீடியோவில் உள்ள பெண் பேசும் மற்றொரு வீடியோவையும் இணைத்துள்ளனர்.

உண்மை அறிவோம்:
மேற்கண்ட வீடியோக்களில் News18 ஊடகத்தின் லோகோ இடம்பெற்றுள்ளதால், இதுபற்றி நாம் ஆய்வு செய்தோம். அப்போது, இதுபற்றி ஏற்கனவே நிறைய செய்திகள் வெளியான விவரம் கிடைத்தது. கடந்த 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற்றபோது, உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள Chandauli மக்களவைத் தொகுதிக்குட்பட்ட வாக்காளர்கள் சிலர், பாஜக.,வினர் தங்களுக்கு வாக்களிக்காமல் வீட்டிலேயே இருக்கும்படி கூறி, ரூ.500 பணம் கொடுத்துள்ளதாகப் புகார் தெரிவித்தனர்.
Zee News Link I Times Now Link
இதுபற்றி அப்போது ஏஎன்ஐ ஊடகம் கூட ட்விட்டரில் தகவல் பகிர்ந்திருக்கிறது. அதனையும் கீழே இணைத்துள்ளோம்.
பழைய வீடியோவை புதியதுபோல பகிர்ந்து வருவதால், சமூக வலைதளங்களில் சர்ச்சை ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து, உத்தரப் பிரதேச போலீசார் இதுபற்றி விளக்கம் அளித்துள்ளனர். அதனை கீழே ஆதாரத்திற்காக இணைத்துள்ளோம்.
எனவே, 2019ல் வெளியான வீடியோ காட்சிகளையே தற்போது மீண்டும் புதியதுபோல, 2022 உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தலுடன் தொடர்புபடுத்தி மேற்கண்ட வகையில் சமூக வலைதளங்களில் தகவல் பகிர்ந்து வருகின்றனர் என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Title:உத்தரப் பிரதேசத்தில் ஓட்டுப் போடாமல் இருப்பதற்காக வாக்காளர்களுக்கு ரூ.500 கொடுத்ததா பாஜக?
Fact Check By: Pankaj IyerResult: Partly False
