
‘’பெண்களுக்கு மாதம் ரூ.1000 சாத்தியமில்லை என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேச்சு,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் நியூஸ் கார்டு ஒன்றை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Claim Link I Archived Link
உண்மை அறிவோம்:
தமிழ்நாடு முழுக்க குடும்ப அட்டை வைத்துள்ள பெண் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 நிதியுதவி வழங்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் 2021ம் ஆண்டு நடைபெற்ற மாநில சட்டப்பேரவை தேர்தலின்போது அறிவிப்பு வெளியிட்டிருந்தார். திமுக.,வின் முக்கியமான
தேர்தல் அறிக்கையாக இது கருதப்பட்டது.
சட்டமன்ற தேர்தலில், திமுக வெற்றி பெற்று ஆட்சியமைத்துவிட்டாலும், இதுவரை குறிப்பிட்ட தேர்தல் வாக்குறுதி அமல்படுத்தப்படவில்லை. இதனால், இந்த ரூ.1000 நிதியுதவியை தரமாட்டார்கள் என்று எதிர்க்கட்சிகள் தரப்பில் பிரசாரம் செய்யப்படுகிறது. தற்போது உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் சூழலில், இந்த பிரசாரத்திற்கு பதிலடி தரும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படுவது உறுதி எனக் குறிப்பிட்டுள்ளார்.
இத்தகைய சூழலில்தான் சிலர் வேண்டுமென்றே மேற்கண்ட நியூஸ் கார்டை பகிர்ந்து வருகின்றனர். எனினும், குறிப்பிட்ட நியூஸ் கார்டை தந்தி டிவி வெளியிடவில்லை. இதுபற்றி அவர்களது டிஜிட்டல் பிரிவு நிர்வாகியிடம் விளக்கம் கேட்டு, உறுதிப்படுத்தியுள்ளோம். இதுதவிர, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தரப்பிலும் விளக்கம் அளித்து, ட்விட்டரில் தகவல் பகிர்ந்துள்ளனர்.
அதனையும் கீழே ஆதாரத்திற்காக இணைத்துள்ளோம்.
எனவே, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பற்றி பகிரப்படும் மேற்கண்ட செய்தி போலியான ஒன்று என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Title:பெண்களுக்கு மாதம் ரூ.1000 நிதியுதவி சாத்தியமில்லை என்று பழனிவேல் தியாகராஜன் கூறினாரா?
Fact Check By: Pankaj IyerResult: False
