பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை கிச்சடி உண்ணும் போராட்டம் அறிவித்தாரா? 

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

‘’தமிழ்நாடு முழுவதும் கிச்சடி சாப்பிடும் போராட்டம் நடத்துவோம் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அறிவிப்பு,’’ எனக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் நியூஸ் கார்டு ஒன்றை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர் ஒருவர் வாட்ஸ்ஆப் வழியே நமக்கு அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில், நாமும் தகவல் தேடியபோது, ஃபேஸ்புக் போன்றவற்றில் பலர் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்வதைக் கண்டோம்.

Facebook Claim Link I Archived Link

உண்மை அறிவோம்:
தமிழ்நாடு முழுக்க உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதால், பாஜக மற்றும் திமுக தரப்பினர் மாறி மாறி, ஒருவரை ஒருவர் குறிவைத்து, போலியான செய்திகளை உருவாக்கி சமூக வலைதளங்களின் மூலமாக பகிர்ந்து வருகின்றனர். இவற்றை பார்க்கும் பொதுமக்கள் உண்மையா, பொய்யா என தெரியாமல் குழப்படைகின்றனர். அவை பற்றி அவ்வப்போது நாம் ஆய்வு செய்து, கட்டுரை வெளியிட்டு வருகிறோம்.

Fact Crescendo Tamil Link 1 I Fact Crescendo Tamil Link 2 I Fact Crescendo Tamil Link 3

அந்த வரிசையில் பகிரப்படும் போலியான செய்திகளில் ஒன்றுதான் மேலே நாம் கண்டதும். உண்மையில், இதனை தந்தி டிவி வெளியிடவில்லை. இதுபற்றி அவர்களிடமும் விளக்கம் கேட்டு, உறுதிப்படுத்தியுள்ளோம்.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Avatar

Title:பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை கிச்சடி உண்ணும் போராட்டம் அறிவித்தாரா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False