
‘’புதுச்சேரியில் ஒமிக்ரான் தொற்று பரவுவதால், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – முதலமைச்சர் ரங்கசாமி,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் ஒரு செய்தி பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Claim Link I Archived Link
குறிப்பிட்ட பதிவை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என சந்தேகம் கேட்டிருந்தார். ‘’ஒமிக்ரான் பரவல் காரணமாக, புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்துள்ளார்,’’ என இதில் எழுதப்பட்டுள்ளது. பலரும் இதனை உண்மை என்று கூறி பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட தகவல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதை தொடர்ந்து, புதுச்சேரி அரசு தரப்பில் மறுப்பு வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன், போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சைபர் கிரைம் போலீசார் இதுபற்றி விசாரித்து வருகின்றனர்.
கொரோனா வைரஸ் பரவல் மற்றும் பருவமழை தாக்கம் காரணமாக புதுச்சேரி மாநிலத்தில் அவ்வப்போது கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிப்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால், 2021 டிசம்பர் மாத இறுதியில் ஒமிக்ரான் காரணமாக, எந்த விடுமுறை அறிவிப்பையும் வெளியிடவில்லை. எனவே, இது தவறான செய்தியாகும். இதுபற்றி ஊடகங்களில் வெளியான விளக்கத்தையும் கீழே ஆதாரத்திற்காக இணைத்துள்ளோம்.

Puthiyathalaimurai Link I Dinamalar Link
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel

Title:ஒமிக்ரான் பரவல்; புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தாரா?
Fact Check By: Pankaj IyerResult: False
