‘திமுக ஆட்சியில் ஊழல் 400% அதிகரிப்பு’ என்று புதிய தலைமுறை செய்தி வெளியிட்டதா?
‘’திமுக ஆட்சியில் ஊழல் 400% அதிகரிப்பு’’ என்று புதிய தலைமுறை ஊடகம் செய்தி வெளியிட்டதாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ தமிழகத்தில் ஊழல்_அதிர்ச்சி சர்வே! 3 ஆண்டுகளில் தமிழகத்தில் ஊழல் 400 சதவீதம் அதிகரித்துள்ளது.. “தி சீக்ரெட்” என்ற அமைப்பு நடத்திய சர்வேயில் அதிர்ச்சி தகவல்!’’ என்று எழுதப்பட்டுள்ளது.
புதிய தலைமுறை லோகோவுடன் உள்ளதால், இதனை பலரும் உண்மை என நம்பி, ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட செய்தியை உண்மையில் புதிய தலைமுறை ஊடகம் வெளியிட்டதா என்று தகவல் தேடினோம். அப்போது, ‘’இது எங்களது பெயரில் பகிரப்படும் போலியான நியூஸ் கார்டு,’’ என்று புதிய தலைமுறை ஊடகத்தின் டிஜிட்டல் பிரிவு தரப்பில் விளக்கம் கிடைத்தது.
மேலும், புதிய தலைமுறை ஊடகம் வெளியிட்ட உண்மையான செய்தி கீழே தரப்பட்டுளளது.
இந்த நியூஸ் கார்டை எடிட் செய்தே வதந்தி பரப்பியுள்ளனர் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram
Title:‘திமுக ஆட்சியில் ஊழல் 400% அதிகரிப்பு’ என்று புதிய தலைமுறை செய்தி வெளியிட்டதா?
Written By: Fact Crescendo TeamResult: Altered