
‘’சீமான் செய்வது ஆர்.எஸ்.எஸ் அரசியல்’’, என்று இயக்குநர் சமுத்திரக்கனி கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு நியூஸ் கார்டு பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:
இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ சீமான் செய்வது ஆர்.எஸ்.எஸ் அரசியல்! சமத்துவம், சமூகநீதி, பெண்ணுரிமைக்காக போராடிய தந்தை பெரியாரைப் பற்றி அவதூறு பரப்புவது மிக மோசமானது. சீமான் செய்வது அயோக்கியத்தன அரசியல் மட்டுமல்ல ஆர்.எஸ்.எஸ் அரசியல். – இயக்குநர் சமுத்திரக்கனி’’ என்று எழுதப்பட்டுள்ளது.
புதிய தலைமுறை லோகோ உள்ளதால், பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
சில நாட்கள் முன்பாக, பெரியார் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் சீமான் கருத்து ஒன்றை தெரிவித்தார். அவரது பேச்சுக்கு பல்வேறு தரப்பிலும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
New Indian Express l The Hindu l Deccan Herald
இத்தகைய சூழலில், சீமானின் பேச்சுக்கு தமிழ் திரைப்பட இயக்குநர் சமுத்திரக்கனி கண்டனம் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்டு, மேற்கண்ட வகையில் சிலர் நியூஸ் கார்டு ஒன்றை சமூக வலைதளங்களில் ஷேர் செய்வதைக் காண முடிகிறது.
ஆனால், இது உண்மையான நியூஸ் கார்டு அல்ல; புதிய தலைமுறை பெயரில் பகிரப்படும் போலியான ஒன்று. இதுதொடர்பாக, நாம் புதிய தலைமுறை டிஜிட்டல் பிரிவு நிர்வாகியிடம் பேசி உறுதிப்படுத்தியுள்ளோம்.
எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட நியூஸ் கார்டு போலியானது என்று, சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram
