சிக்கந்தர்மலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று வக்ஃபு போர்டு தலைவர் கூறினாரா?

அரசியல் சார்ந்தவை | Political தமிழ்நாடு | Tamilnadu

திருப்பரங்குன்றம் மலை வக்ஃப் போர்டுக்கு சொந்தமானது என்றும், அங்குள்ள ஆக்கிரமிப்பை (முருகன் கோவிலை) அகற்ற வேண்டும் என்று வக்ஃப் போர்டு தலைவர் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “வக்ஃ போர்டு தலைவரின் சர்ச்சை பேச்சு. வக்ஃ போர்டுக்கு சொந்தமான சிக்கந்தர்மலை மீது உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழி வெட்டி சமபந்தி விருந்து வைத்து சமூக நல்லிணக்கம் பேணப்படும். விரைவில் இதற்காக மதச்சார்பற்ற இயக்கங்களுடன் சேர்ந்து ஆட்சியரிடமும்,முதலமைச்சரிடமும் மனு அளிக்க உள்ளோம்” என்று இருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

திருப்பரங்குன்றம் மலையை வைத்து இரு தரப்பினர் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் வக்ஃப் வாரிய தலைவர் இந்துக்களுக்கு எதிரான கருத்தைக் கூறியதாக ஒரு பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

நியூஸ் கார்டின் தமிழ் ஃபாண்ட் புதிய தலைமுறை வெளியிடும் நியூஸ் கார்டில் உள்ளது போல இல்லை. வக்ஃப் வாரியம் என்பதை வக்ஃ என்று தவறாக எழுத்துப்பிழையுடன் குறிப்பிட்டுள்ளனர். அனைத்துக்கும் மேலாக தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவர் நவாஸ்கனி புகைப்படத்திற்குப் பதில் வேறு ஒருவரின் புகைப்படம் இருந்தது. இவை எல்லாம் இந்த நியூஸ் கார்டு போலியானது என்பதை உறுதி செய்தன.

உண்மைப் பதிவைக் காண: puthiyathalaimurai.com I Archive

இதை உறுதிசெய்துகொள்வதற்காகப் புதியதலைமுறை டிஜிட்டல் பொறுப்பாளருக்கு இந்த நியூஸ் கார்டை அனுப்பி வைத்தோம். சிறிது நேரத்தில், “இந்த நியூஸ் கார்டை நாங்கள் வெளியிடவில்லை” என்று மறுப்பு நியூஸ் கார்டை தங்கள் இணையதளத்தில் வெளியிட்டு, அதன் இணைப்பை நமக்கு அனுப்பினார். இதன் மூலம் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டு போலியானது என்பது உறுதியாகிறது.

முடிவு:

சிக்கந்தர்மலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு ஆடு, கோழி வெட்டி சமபந்தி விருந்து அளிக்கப்படும் என்று வக்ஃப் போர்டு தலைவர் அறிவிப்பு என்று பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram

Avatar

Title:சிக்கந்தர்மலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று வக்ஃபு போர்டு தலைவர் கூறினாரா?

Written By: Chendur Pandian  

Result: False