நாம் தமிழர் கட்சி 5 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று புதிய தலைமுறை செய்தி வெளியிட்டதா?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

‘’ நாம் தமிழர் கட்சி 5 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று புதிய தலைமுறை செய்தி வெளியிட்டது,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். 

இந்த வீடியோ செய்தியின் தலைப்பில், ‘’ தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு, திமுக 34-38, அதிமுக 1, பாஜக 0, நாதக 5’’ என்று எழுதப்பட்டுள்ளது. 

புதிய தலைமுறை லோகோவுடன் உள்ளதால், பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.  

உண்மை அறிவோம்:

மேற்கண்ட தகவல் தொடர்பாக, நாம் விவரம் தேடினோம். முதலில், இதுபோன்று புதிய தலைமுறை ஏதேனும் கருத்துக் கணிப்பு வெளியிட்டதா என்று நேரடியாக, அவர்களது ஆசிரியர் குழுவை தொடர்பு கொண்டு கேட்டோம். 

அப்போது, ‘’நாங்கள் சில நாட்கள் முன்பாக வெளியிட்ட நியூஸ் கார்டை எடுத்து, நாதக பெயரை சேர்த்து, இவ்வாறு எடிட் செய்து, அக்கட்சியினர் வதந்தி பரப்புகின்றனர்,’’ என்று தெரிவித்தனர். 

உண்மையான நியூஸ் கார்டையும், போலியான நியூஸ் கார்டையும் ஒப்பீடு செய்து கீழே இணைத்துள்ளோம். 

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட நியூஸ் கார்டு எடிட் செய்யப்பட்ட ஒன்று, என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram 

Avatar

Title:நாம் தமிழர் கட்சி 5 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று புதிய தலைமுறை செய்தி வெளியிட்டதா?

Fact Check By:  Fact Crescendo Team 

Result: ALTERED