‘மணிப்பூரில் குழந்தை உட்பட 4 பேர் எரித்துக் கொலை’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இதில், ‘’ மணிப்பூரில் பச்சிளம் குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர்கள் எரித்து கொலை செய்யப்பட்டுள்ளனர், தமிழகமே விளித்துகொள்… பிஜேபி சங்கிகள் கால் வைத்த இடம் சுடுகாடு தான் ஆகும்…,’’ என்று எழுதப்பட்டுள்ளது.

பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.

Facebook Claim Link l Archived Link

உண்மை அறிவோம்:

குறிப்பிட்ட புகைப்படத்தை நாம் ரிவஸ் இமேஜ் தேடல் செய்தபோது, இது ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர் அருகே உள்ள Osian tehsil-க்கு உட்பட்ட Ramnagar Dhani (Chairai) என்ற கிராமத்தில் நிகழ்ந்த கொலை சம்பவம் என்று விவரம் கிடைத்தது.

இதில் உள்ள கதவுகள், ஒருவர் நிற்பது, அடுத்தப்படியாக சடலங்கள் கிடப்பது போன்றவற்றை வைத்து, இரண்டும் ஒரே புகைப்படம்தான் என்று நாம் எளிதாக உறுதி செய்ய முடிகிறது.

செய்தி ஆதாரம் இதோ… bhaskar.com link

அடுத்தப்படியாக, நாம் இதுபற்றி சம்பந்தப்பட்ட OSIAN காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு பேசி உறுதிப்படுத்தியுள்ளோம்.

எனவே, ராஜஸ்தான் மாநிலத்தில் நிகழ்ந்ததை எடுத்து, மணிப்பூரில் நடந்த கொடூரம் என்று கூறி வதந்தி பரப்பியுள்ளனர் என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:மணிப்பூரில் குழந்தை உட்பட 4 பேர் எரித்துக் கொலை என்று பரவும் புகைப்படம் உண்மையா?

Written By: Fact Crescendo Team

Result: False