‘’ திவ்யா ஸ்பந்தனா மாரடைப்பால் மரணம்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இதில், ‘’ நடிகை திவ்யா ஸ்பந்தனா காலமானார். நடிகையும் அரசியல்வாதியுமான திவ்யா ஸ்பந்தனா(40) மாரடைப்பு காரணமாக காலமானார் மாண்டியா தொகுதி காங்கிரஸ் எம்.பியான திவ்யா கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் பேத்தியாவார்’’, என்று எழுதப்பட்டுள்ளது.

பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

பல்வேறு ஊடகங்களும் மேற்கண்ட வகையில் பரபரப்பாகச் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால், அடுத்த சில மணி நேரத்திலேயே, ‘’இது உண்மையல்ல,’’ என்று கூறி, திவ்யா வெளிநாடு ஒன்றில் உணவருந்தும் புகைப்படம் ஒன்றை அவரது தோழி ஒருவர் வெளியிட்டுள்ளார்.

அடுத்தப்படியாக, இந்த ட்வீட் பதிவின் கீழேயே, திவ்யாவும், ‘’விரைவில் நம்ம ஊரில் சந்திக்கலாம்,’’ என்று கமெண்ட் பகிர்ந்துள்ளார்.

மீண்டும் ஒருமுறை ஆதாரத்திற்காக, அவரது கமெண்ட் லிங்க் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் திவ்யா தன்னிடம் நேரடியாகப் பேசியதாக, பத்திரிகையாளர் Dhanya Rajendran பதிவு செய்துள்ளார்.

இறுதியாக, காங்கிரஸ் கட்சி தரப்பிலும் விளக்கம் தரப்பட்டுள்ளது.

இதன்மூலமாக, திவ்யா நலமுடன்தான் உள்ளார் என்று தெளிவாகிறது. வேண்டுமென்றே சிலர் (ஊடகங்களும் கூட) அடிப்படை ஆதாரமின்றி இவ்வாறு வதந்தி பரப்பியுள்ளனர் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:திவ்யா ஸ்பந்தனா மாரடைப்பால் மரணம் என்று பகிரப்படும் வதந்தியால் சர்ச்சை…

Written By: Fact Crescendo Team

Result: False