கிறிஸ்தவ மதமாற்றத்தை ஆதரிக்கிறோம் என்று கே.எஸ்.அழகிரி கூறினாரா?

அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

‘’கிறிஸ்தவர்களுக்கு காங்கிரஸ் கட்சி துணை நிற்கும்,’’ என்று காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியதாக, ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பரவுகிறது. இதுபற்றி ஆய்வு மேற்கொண்டோம்.

தகவலின் விவரம்:

இந்த செய்தியை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி உண்மையா என கேட்டிருந்தார். இதனைப் பலரும் ஃபேஸ்புக்கில் உண்மை என நம்பி ஷேர் செய்வதைக் கண்டோம்.

Facebook Claim Link I Archived Link

இதே வாக்கியங்களை வைத்து, சோழன் நியூஸ் என்ற டெம்ப்ளேட்டில் அச்சு மாறாமல் வெளியிடப்பட்ட மற்றொரு நியூஸ் கார்டையும் கண்டோம்.

உண்மை அறிவோம்:
திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த லாவண்யா (17) என்ற மாணவி, விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் தமிழ்நாடு அரசியல் அரங்கில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தை பாஜக கையில் எடுத்துள்ள சூழலில், மதமாற்றம் இதற்கு காரணமா என்ற கேள்வியும் பலரால் முன்வைக்கப்படுகிறது.

News7 Tamil Live Link I Maalaimalar Link

இத்தகைய சூழலில், கிறிஸ்தவ மதமாற்றத்தை ஆதரிப்பதாகவும், கிறிஸ்தவர்களுக்கு காங்கிரஸ் கட்சி துணை நிற்கும் எனவும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பேசியதாக, மேற்கண்ட வகையில் செய்தி பரவுகிறது.

ஆனால், இது தங்களது பெயரில் பகிரப்படும் போலியான செய்தி என்று தந்தி டிவி மறுப்பு தெரிவித்துள்ளது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel

Avatar

Title:கிறிஸ்தவ மதமாற்றத்தை ஆதரிக்கிறோம் என்று கே.எஸ்.அழகிரி கூறினாரா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False