தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்கும் தேதி ஜூன் 9க்கு மாற்றப்பட்டதா?

Government தமிழ்நாடு | Tamilnadu

தமிழ்நாட்டில் 1 முதல் 12ம் வகுப்பு வரையிலான வகுப்புகள் கோடை விடுமுறைக்குப் பிறகு ஜூன் 9ம் தேதி திறக்கும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்ததாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

சன் நியூஸ் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “ஜூன் 2 தேதி பள்ளிகள் திறப்பு கிடையாது! 1 முதல் 12ம் வகுப்பு பள்ளிகள் திறப்பு ஜூன்-9 தேதி மகிழ்ச்சி தகவல். அன்பில் மகேஷ் அதிரடி அறிவிப்பு” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நியூஸ் கார்டை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் ஜூன் 2ம் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. கோடை வெப்பம் மிகுதியாக இருந்தால் பள்ளிகள் திறக்கப்படும் தேதி தள்ளி வைக்கப்படும். ஆனால், தமிழகத்தில் பரவலாக மேகமூட்டத்துடனும், சில இடங்களில் மழையும் பெய்து வருவதால் 2025ம் ஆண்டிகள் பள்ளிகள் திறக்கப்படுவது தள்ளிப்போக வாய்ப்பில்லை.

இந்த நிலையில் பள்ளிகள் ஜூன் 9ம் தேதி திறக்கப்படும் என்று சமூக ஊடகங்களில் சிலர் பதிவிட்டு வருகின்றனர். பார்க்க இந்த நியூஸ் கார்டு சன் டிவி வெளியிட்டது போல இல்லை. தமிழ்நாடு அரசு தரப்பிலிருந்து அறிவிப்பும் வெளியாகவில்லை. ஆனால், சமூக ஊடகங்களில் மட்டும் இந்த தகவல் வைரலாக பகிரப்பட்டு வரவே, இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

இந்த நியூஸ் கார்டு சன் டிவி வெளியிட்டது போல இல்லை. எனவே, இது தொடர்பாக சன் நியூஸ் டிஜிட்டல் பிரிவு பொறுப்பாளருக்கு இந்த நியூஸ் கார்டை அனுப்பினோம். அவரும் இது போலியானது என்று உறுதி செய்தார்.

Archive

அடுத்ததாக பள்ளி திறப்பு தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை தரப்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளதா என்று தேடிப் பார்த்தோம். அப்போது தமிழ்நாடு அரசின் உண்மை கண்டறியும் பிரிவு வெளியிட்டிருந்த எக்ஸ் தள பதிவு நமக்குக் கிடைத்தது. அதில், “தமிழ்நாட்டில் பள்ளிகள் ஜூன் 9ம் தேதி திறப்பதாக பரப்பப்படும் வதந்தி” என்று குறிப்பிட்டிருந்தனர். 

உண்மைப் பதிவைக் காண: zeenews I Archive

தொடர்ந்து தேடிய போது ஜூன் 2ம் தேதி பள்ளிகளைத் திறக்க வழிகாட்டு நெறிமுறைகளைப் பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டிருப்பதாகச் செய்திகள் நமக்குக் கிடைத்தன. இவை எல்லாம் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டு மற்றும் தகவல் தவறானது என்பதை உறுதி செய்தன.

முடிவு:

ஜூன் 2ம் தேதிக்குப் பதில் 9ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழ்நாடு எஅரசு அறிவிப்பு என்று பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram

Avatar

Title:தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்கும் தேதி ஜூன் 9க்கு மாற்றப்பட்டதா?

Fact Check By: Chendur Pandian 

Result: False

Leave a Reply