
கடன் கேட்டு வந்த பெண்ணை கர்ப்பமாக்கி அனுப்பியது போல் இருக்கிறது தமிழ் நாடு அரசின் பட்ஜெட் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புகைப்படத்துடன் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “கடன் கேட்டு வந்த பெண்ணை கர்ப்பமாக்கி அனுப்பியது போல் இருக்கிறது திமுக அரசின் பட்ஜெட் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்” என்று இருந்தது.
இந்த பதிவை டகால்டி அழகா என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2021 ஆகஸ்ட் 14ம் தேதி பதிவிட்டிருந்தார். இவரைப் போல பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
அ.தி.மு.க மூத்த தலைவர்களுள் ஒருவரும் முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் கூறியதாக பரவும் நியூஸ் கார்டை பார்க்கும் போதே போலியானது என்பது தெரிகிறது. இருப்பினும் விஷம நோக்கத்துடன் இந்த நியூஸ் கார்டு பலராலும் பகிரப்பட்டு வருகிறது. எனவே. இது பற்றி ஆய்வு செய்தோம்.

புதிய தலைமுறையில் 2021 ஆகஸ்ட் 13ம் தேதி வெளியான நியூஸ் கார்டுகளை ஆய்வு செய்தோம். அப்போது, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் படத்துடன் கூடிய நியூஸ் கார்டு கிடைத்தது. அதில், “மக்களுக்கு டிமிக்கி கொடுக்கிற டிஜிட்டல் டிமிக்கிதான் தமிழ்நாடு பட்ஜெட்; வாக்குறுதிகளை கொடுத்துவிட்டு கடன், கடன் என்கின்றனர்; யானைப் பசிக்கு சோளப் பொரி போல உள்ளது தமிழ்நாடு பட்ஜெட் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்” என்று இருந்தது.

அசல் பதிவைக் காண: Facebook I Archive
இந்த நியூஸ் கார்டு தொடர்பாக புதிய தலைமுறை டிஜிட்டல் பிரிவு நிர்வாகி சரவணனைத் தொடர்புகொண்டு விசாரித்தோம். அவரும் இது போலியானதுதான் என்று உறுதி செய்தார்.
ஜெயக்குமார் பேட்டி தொடர்பாக தேடினோம். அனைத்து முன்னணி ஊடகங்களிலும் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி தொடர்பான செய்தி வெளியாகி இருந்தது. அதில் அவ்வாறு அவர் கூறவில்லை. அவருடைய பேட்டியின் வீடியோ கிடைக்கிறதா என்று பார்த்தோம். பல யூடியூப் சேனல்களும் அவருடைய பேட்டியை வெளியிட்டிருந்தன. மக்களுக்கு டிமிக்கி கொடுக்கும் பட்ஜெட் என்று அவர் கூறியிருந்தாரே தவிர, கடன் கேட்டு வந்த பெண்ணை கர்ப்பமாக்கி அனுப்பியது போல இருக்கிறது என்று அவர் கூறவில்லை.
அசல் பதிவைக் காண: tamil.news18.com I Archive
இதன் மூலம் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் அளித்த பேட்டியை மாற்றி விஷமத்தனமாக தகவல் சேர்த்துப் பதிவிட்டிருப்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தமிழ்நாடு அரசின் பட்ஜெட் பற்றி முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் அளித்த பேட்டி தொடர்பாக புதிய தலைமுறை வெளியிட்ட நியூஸ் கார்டை எடிட் செய்து விஷமத்தனமான கருத்து சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருகிறது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:கடன் கேட்டு வந்த பெண்… முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாகப் பரவும் போலிச் செய்தி!
Fact Check By: Chendur PandianResult: False
