தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைந்தால் ரேஷனில் கோமியம் வழங்கப்படும் என்று தமிழிசை கூறினாரா?

False அரசியல் சார்ந்தவை | Political தமிழ்நாடு | Tamilnadu

தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமைத்தால் ரேஷனில் இலவசமாகக் கோமியம் வழங்கப்படும் என்று பாஜக மூத்த தலைவரும் முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

தமிழிசை புகைப்படத்துடன் வெளியான நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “அமிர்த நீர். தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைத்தால் அனைத்து ரேஷன் கடைகளிலும் இலவசமாக அமிர்த நீரான கோமியம் வழங்குவோம்! – பாஜக மூத்த தலைவர் தமிழிசை” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நியூஸ் கார்டை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

கோமியத்தை அமிர்த நீர் என்று சில மாதங்களுக்கு முன்பு தமிழிசை சௌந்தரராஜன் கூறியிருந்தார். ஆனால், ரேஷனில் இலவசமாக வழங்கப்படும் என்றெல்லாம் அவர் கூறியதாக எந்த ஒரு செய்தியும் இல்லை. இதே போன்று இதற்கு முன்பும் கூட பல முறை வதந்தி பரவியுள்ளது. கோமியத்தை பாஜக அலுவலகத்தில் வழங்கலாம் என்று முன்பு வதந்தி பரப்பினர். எனவே, இந்த நியூஸ் கார்டு மற்றும் தகவல் தவறாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ஆய்வு செய்தோம்.

இப்படி தமிழிசை சௌந்தரராஜன் கூறினாரா அது தொடர்பாக செய்தி வெளியாகி உள்ளதா என்று கூகுளில் தேடிப் பார்த்தோம். ஆனால், நமக்கு தமிழிசை இப்படி கூறியதாக எந்த செய்தியும் கிடைக்கவில்லை. தமிழ் ஜனம் என்ற ஊடகத்தின் லோகோவுடன் நியூஸ் கார்டு உள்ளது. அந்த ஊடகம் இப்படி ஏதேனும் நியூஸ் கார்டை வெளியிட்டதா என்று அறிய அதன் சமூக ஊடக பக்கங்களைப் பார்த்தோம். அதிலும், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்று எந்த நியூஸ் கார்டும் வெளியாகவில்லை.

இந்த நியூஸ் கார்டை தமிழிசை சௌந்தரராஜனின் சமூக ஊடகப் பிரிவு பொறுப்பாளருக்கு அனுப்பி, இது தொடர்பாக தமிழிசையின் கருத்தை அறிய விரும்புவதாகத் தெரிவித்தோம். தமிழிசை செந்தரராஜனிடம் பேசிவிட்டு சொல்வதாகக் கூறிய அவர், பின்னர் நம்மைத் தொடர்புகொண்டு இது முழுக்க முழுக்க தவறான தகவல். தமிழிசை இவ்வாறு எங்கேயும் கூறவில்லை” என்றார். 

இந்த ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டு போலியானது என்பதை உறுதி செய்தோம்.

முடிவு:

தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைத்தால் ரேஷனில் இலவசமாக கோமியம் வழங்கப்படும் என்று தமிழிசை கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram

Avatar

Title:தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைந்தால் ரேஷனில் கோமியம் வழங்கப்படும் என்று தமிழிசை கூறினாரா?

Fact Check By: Chendur Pandian 

Result: False

Leave a Reply