”ஆழ்ந்த இரங்கல்”க்கு தடை கோரி மனு என்று தந்தி டிவி செய்தி வெளியிட்டதா? 

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

‘’ஆழ்ந்த இரங்கல்”க்கு தடை கோரி மனு என்று தந்தி டிவி செய்தி வெளியிட்டதாகக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். 

இதில், ‘’ ”ஆழ்ந்த இரங்கல்”க்கு தடை கோரி மனு. பாஜக தலைவ அண்ணாமலையின் பாத யாத்திரை தொடர்பான செய்திகளில் ஆழ்ந்த இரங்கல் என கமெண்ட் எழுத தடை செய்ய கோரி உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வில் பாஜக அறிவுசார் அணியின் சார்பில் மனு,’’ என்று எழுதப்பட்டுள்ளது. 

Facebook Claim Link l Archived Link 

பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.  

உண்மை அறிவோம்:

பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை ‘’என் மண் என் மக்கள்’’ என்ற பெயரில் பாத யாத்திரை மேற்கொண்டுள்ளார். 

இதையொட்டி, அவரை கேலி செய்தும், விமர்சித்தும் சமூக வலைதளங்களில் பலர் தகவல் பரப்புகின்றனர். அவற்றில் ஒன்றுதான் மேற்கண்ட செய்தியும். 

ஆம், ‘’இந்த செய்தியை நாங்கள் வெளியிடவில்லை’’ என்று தந்தி டிவி ஏற்கனவே மறுப்பு தெரிவித்துள்ளது. 

ஆதாரம் கீழே தரப்பட்டுள்ளது. 

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட செய்தி போலியான ஒன்று என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram 

Avatar

Title:”ஆழ்ந்த இரங்கல்”க்கு தடை கோரி மனு என்று தந்தி டிவி செய்தி வெளியிட்டதா?

Written By: Fact Crescendo Team 

Result: False