
‘‘காங்கிரஸ் ஆளும் இமாச்சலப் பிரதேசத்தில் குர்குரே திருடிய சிறுவன் தாக்கப்பட்ட அவலம்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ஹிமாச்சல பிரதேஷில் 15 வயது சிறுவன் குர்கரே திருடியதாக கூறி அடித்து கண்ணில் மிளகாய் பொடியை தூவி நிர்வாணமாக அழைத்து சென்றுள்ளனர். இது விவாதம் ஆகாது காரணம் காங்கிரஸ் ஆட்சி’’, என்று எழுதப்பட்டுள்ளது.
பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட புகைப்படத்தை நாம் ரிவஸ் இமேஜ் தேடல் செய்தபோது, இது கடந்த 2016ம் ஆண்டு முதலாகவே இணையத்தில் காணப்படுவதாக, அறிந்துகொண்டோம். ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கர் மாவட்டத்தில் திருட்டுப் புகாரில் மூன்று மைனர் சிறுவர்களை (தலித்) ஒரு கும்பல் அடித்து, நிர்வாணப்படுத்தியது என்றும், அதுதொடர்பான செய்திகள ஊடகங்களில் ஏற்கனவே வெளியாகியிருப்பதும் தெரியவந்தது.
இதுபற்றிய கூடுதல் செய்தி ஆதாரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.

DNA India Link l Deccan Herald Link
இதன்படி பார்த்தால், கடந்த 2016ம் ஆண்டு வசுந்தரா ராஜே (பாஜக ஆட்சி) ராஜஸ்தான் மாநில முதலமைச்சராக இருந்தபோது இச்சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.
எனவே, உண்மை வேறொன்றாக இருக்க, அரசியல் நோக்கத்திற்காக வேண்டுமென்றே காங்கிரஸ் கட்சி மீது பழிபோடும் வகையில் இத்தகைய வதந்தியை பாஜக ஆதரவாளர்கள் பரப்பியுள்ளனர் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Title:காங்கிரஸ் ஆளும் இமாச்சலப் பிரதேசத்தில் குர்குரே திருடிய சிறுவன் தாக்கப்பட்டதாகப் பரவும் வதந்தி…
Written By: Fact Crescendo TeamResult: MISSING CONTEXT
