
‘’கே.என்.நேரு தரையில் அமர்ந்த விவகாரத்திற்கு டி.ஆர்.பி.ராஜா கண்டனம்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் ஒரு செய்தி வேகமாகப் பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

இதனைப் பலரும் உண்மை போல ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
திமுக அமைச்சர் கே.என்.நேரு, பங்காரு அடிகள் சாமியாரை நேரில் சந்தித்தபோது எடுத்த புகைப்படங்கள் வெளியாகி, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. இதன்போது, நேரு தரையில் அமர்ந்திருந்தார் என்றும், இது திமுக.,வின் கொள்கையான சுய மரியாதையை அவமதிக்கும் வகையில் உள்ளதென்றும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Asianet Tamil Link I Indian Express Tamil Link
இந்த சூழலில், மேற்கண்ட வகையில், கே.என்.நேரு தரையில் அமர்ந்ததைக் கண்டித்து, திமுக ஐடி., பிரிவு செயலாளர் டி.ஆர்.பி. ராஜா கருத்து தெரிவித்துள்ளதாக, செய்தி பகிரப்படுகிறது. அவர் இப்படி கருத்து கூறியதாக, செய்திகள் எதுவும் காணக் கிடைக்கவில்லை.
உண்மையில், இதனை தந்தி டிவி வெளியிடவில்லை. இதுபற்றி அவர்களது அதிகாரப்பூர்வ சமூக வலைதள கணக்குகளின் வழியே மறுப்பும் தெரிவித்துள்ளனர்.
எனவே, மேற்கண்ட நியூஸ் கார்டு போலியான ஒன்று என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Title:கே.என்.நேரு தரையில் அமர்ந்த விவகாரம்; டி.ஆர்.பி. ராஜா கண்டனம் தெரிவித்தாரா?
Fact Check By: Pankaj IyerResult: False
