‘’ பாலஸ்தீன குழந்தைகளுக்காக, கால்பந்து மைதானத்தில் பொம்மைகள் வீசப்பட்டது,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இதில், ‘’ பாலஸ்தீன குழந்தைகளுக்காக மைதானத்தில் பொம்மைகளை எரிந்த காட்சி.

#FreePalestine

#Palestine

#viralshortvideo

#Gaza

#beauty

#viralvideo

#shortstory

#beautiful,’’ என்று எழுதப்பட்டுள்ளது.

Claim Link l Archived Link

பலரும் இதனை உண்மை என நம்பி, ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே நடைபெற்று வரும் போர் தொடர்பாக சமூக வலைதளங்களில் வித விதமான தகவல்கள் பகிரப்படுகின்றன. அந்த வரிசையில் பகிரப்படும் மற்றொரு தகவல்தான் நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட வீடியோ செய்தியும்…

ஆம், உண்மையில் இந்த வீடியோவுக்கும், பாலஸ்தீனத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. இது துருக்கி நாட்டில் பதிவு செய்யப்பட்டதாகும். அந்நாட்டில் 2023, பிப்ரவரி மாதம் 6ம் தேதி நிகழ்ந்த நிலநடுக்கத்தில் உயிர் பிழைத்த குழந்தைகளுக்கு நன்கொடை தரும் விதமாக, இஸ்தான்புல் நகரில் நடைபெற்ற கால்பந்து போட்டி ஒன்றின்போது ரசிகர்கள் மைதானத்தில் ஏராளமான பொம்மைகளை வீசியெறிந்தனர்.

கூடுதல் செய்தி ஆதாரம் இதோ…

Aljazeera Link

எனவே, வேறொரு வீடியோவை எடுத்து, பாலஸ்தீனத்துடன் தொடர்புபடுத்தி, வதந்தி பரப்பியுள்ளனர் என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:பாலஸ்தீன குழந்தைகளுக்காக மைதானத்தில் பொம்மைகள் வீசப்பட்டதா?

Written By: Fact Crescendo Team

Result: False