‘’பெட்ரோல், டீசல் வருமானத்தில் மத்திய அரசு ராமர் கோயில், அனுமன் சிலை நிறுவுதல் உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டு வருகிறது,’’ என்று வானதி சீனிவாசன் பேசியதாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பரவுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இந்த தகவலை வாசகர் ஒருவர் வாட்ஸ்ஆப் (+91 9049044263) வழியே நமக்கு அனுப்பி உண்மையா எனக் கேட்டிருந்தார்.

இதன்பேரில், தகவல் தேடியபோது பலரும் இதனை உண்மை என நம்பி, ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றில் பகிர்வதைக் கண்டோம்.

Facebook Claim Link I Archived Link

உண்மை அறிவோம்:
சமீபத்தில் எரிபொருள் விலை உயர்வு பற்றி ஊடகங்களுக்கு பேட்டி அளித்த பாஜக எம்எல்ஏ., வானதி சீனிவாசன், பெட்ரோல், டீசல் வருமானத்தை நாங்கள் ஒன்றும் வீட்டுக்குக் கொண்டு செல்லவில்லை, என்று காட்டமாகப் பேசியிருந்தார்.

இதனை பலரும் சமூக வலைதளங்களில் விமர்சித்து வரும் சூழலில், மேற்கண்ட வகையில், சிலர் பிபிசி தமிழ் லோகோவுடன் கூடிய நியூஸ் கார்டை பகிர்கின்றனர். ஆனால், இது உண்மையான செய்தியல்ல.

இதுபற்றி பிபிசி தமிழ் ஆசிரியர் குழுவில் பேசி உறுதிப்படுத்தியுள்ளோம். அடுத்தப்படியாக, பாஜக ஐடி பிரிவு நிர்வாகி சிடிஆர் நிர்மல்குமாரை தொடர்பு கொண்டு உறுதி செய்துள்ளோம்.

தவிர, பிபிசி தமிழ் மற்றும் வானதி சீனிவாசன் ஆகியோரின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள கணக்குகளில் இப்படியான எந்த பதிவும் காண கிடைக்கவில்லை. எனவே, வானதி சீனிவாசன் பெயரில் பகிரப்படும் வதந்திதான் மேற்கண்ட நியூஸ் கார்டு என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Avatar

Title:பெட்ரோல், டீசல் வருமானத்தில் ராமர் கோயில், அனுமன் சிலை போன்ற வளர்ச்சித் திட்டங்கள் நடப்பதாக வானதி சீனிவாசன் கூறினாரா?

Fact Check By: Pankaj Iyer

Result: False