ஓட விட்டுருவோம் என்று இன்ஸ்பெக்டரை மிரட்டினாரா காஞ்சிபுரம் திமுக எம்.எல்.ஏ எழிலரசன்?

அரசியல் சார்ந்தவை | Political தமிழ்நாடு | Tamilnadu

‘’ஓட விட்டுருவோம் என இன்ஸ்பெக்டரை மிரட்டிய காஞ்சிபுரம் திமுக எம்.எல்.ஏ எழிலரசன்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். 

இதில், ‘’ காஞ்சிபுரம் #திமுக_MLA எழிலரசன் இன்ஸ்பெக்டரை பார்த்து போ நீ, போ நீ அதற்கு போலீஸ் அதிகாரி நான் போறேன் வார்த்தையை விடாதீங்கன்னு சொன்னவுடன்..ஓட விட்டுறுவோம்,தேவிடியா பசங்களா..கலெக்டர்,எஸ்பி எந்த மயிரானாவது வரட்டும்… ஓட விட்டுறுவோம்… போலீசுக்கே இந்த நிலை…’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன் வீடியோ ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது. அதில், காஞ்சிபுரம் திமுக எம்.எல்.ஏ எழிலரசன், போலீசாருடன் ஆக்ரோஷமாக, வாக்குவாதம் செய்வது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. 

Claim Link 1 l Claim Link 2 l Claim Link 3

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர். 

உண்மை அறிவோம்:

மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இதற்கும், தற்போதைய திமுக ஆட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தெரியவந்தது. காஞ்சிபுரம் திமுக எம்எல்ஏ., எழிலரசன் கடந்த 2016ம் ஆண்டு மற்றும் 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். 

இந்த சூழலில், அவர் பதவி திமிரில் போலீசாரை நடுரோட்டில் வைத்து மிரட்டுவதாகக் குறிப்பிட்டு மேற்கண்ட வீடியோவை பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். ஆனால், இந்த வீடியோ கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின்போது எடுக்கப்பட்ட ஒன்று. இதுபோன்று போலீசாரை அச்சுறுத்தும் வகையில் பேசியதற்காக, எழிலரசன் மீது அப்போதே வழக்குப் பதிவு செய்யப்பட்டதும் இங்கே குறிப்பிடத்தக்கது. 

முழு வீடியோ லிங்க் கீழே இணைக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக, பல்வேறு ஊடகங்களும் அப்போதே செய்தி வெளியிட்டிருக்கின்றன. அவற்றையும் ஆதாரத்திற்காக இங்கே இணைத்துள்ளோம். 

Vikatan Link l One India Tamil l Maalaimalar

இதுதவிர, மேற்கண்ட சம்பவம் நடந்த 2019ம் ஆண்டு தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சியே (2016-2021) நடைபெற்றது. அதன்பிறகு, 2021 சட்டமன்ற தேர்தல் வெற்றிக்குப் பிறகே திமுக ஆட்சிக்கு வந்தது. இந்த விவரம் தெரியாமல், பலரும் 2019ம் ஆண்டு நிகழ்ந்த சம்பவத்தை எடுத்து, தற்போதைய திமுக ஆட்சியுடன் தொடர்புபடுத்தி, வதந்தி பரப்புகிறார்கள், என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram 

Avatar

Title:ஓட விட்டுருவோம் என்று இன்ஸ்பெக்டரை மிரட்டினாரா காஞ்சிபுரம் திமுக எம்.எல்.ஏ எழிலரசன்?

Fact Check By: Pankaj Iyer 

Result: Missing Context