
‘’எம்ஜிஆர் புகைப்படத்திற்கு அஞ்சலி செலுத்திய விஜய்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:
இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ எடிட் னு நினச்சேன் உண்மையாவே பண்ணிருக்கான்
ஆகப்பெரும் அரசியல் தற்குறி யா இருக்காரே அண்ணா 😭.’’ என்று எழுதப்பட்டுள்ளது.
பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது ஒரு எடிட் செய்யப்பட்ட புகைப்படம் என்று தெரியவந்தது.
இதன்படி, கடந்த ஜனவரி 3, 2025 அன்று வேலு நாச்சியார் பிறந்த தினத்தையொட்டி, சென்னை, பனையூரில் உள்ள தவெக., தலைமை நிலையச் செயலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு விஜய், மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதுதொடர்பான புகைப்படத்தை தனது X பக்கத்தில், பகிர்ந்திருந்தார்.
இதனை எடுத்து, வேண்டுமென்றே சிலர் எடிட் செய்து, ‘எம்ஜிஆர் புகைப்படத்திற்கு அஞ்சலி செலுத்திய விஜய்’ என்று கூறி வதந்தி பரப்புகிறார்கள்.
மேலும், எம்ஜிஆர் பிறந்த நாளில் விஜய் வாழ்த்து மட்டுமே கூறியிருந்தார்.
எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட புகைப்படம் எடிட் செய்யப்பட்ட ஒன்று, என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Title:எம்ஜிஆர் புகைப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினாரா விஜய்?
Fact Check By: Pankaj IyerResult: ALTERED
