
‘’அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் அதிமுகவினர் ஆளுநரை விமர்சிக்க வேண்டாம்’’, என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:
இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ ஆளுநரை விமர்சிக்க வேண்டாம். அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் அதிமுகவினர் ஆளுநர் குறித்து விமர்சிக்க வேண்டாம் என தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வாய்மொழி உத்தரவு’’ என்று எழுதப்பட்டுள்ளது.
புதிய தலைமுறை லோகோவுடன் உள்ளதால், பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட செய்தி உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது புதிய தலைமுறை பெயரில் பரவும் போலியான நியூஸ் கார்டு என தெரியவந்தது. இதுதொடர்பாக, நாம் புதிய தலைமுறை ஆசிரியர் குழு மற்றும் அதிமுக ஐடி பிரிவு நிர்வாகி உள்ளிட்டோரிடம் பேசி, உறுதிப்படுத்தியுள்ளோம்.
எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட நியூஸ் கார்டு போலியான ஒன்று, என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Title:அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் அதிமுகவினர் ஆளுநரை விமர்சிக்க வேண்டாம் என்று எடப்பாடி பழனிசாமி கூறினாரா?
Written By: Pankaj IyerResult: False
