
‘’உத்தரப் பிரதேசத்தில் குழந்தை வரம் கேட்டு சாக்கடையில் படுத்த பெண்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:
இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’கல்யாணம் ஆகி 6 வருஷம் குழந்தை இல்லையாம். அதுக்கு சாக்கடையில் படுக்க வைத்தால் சரியாகும்னு ஒரு ஜோசியக்காரன் சொன்னதை கேட்டு அந்த பொண்ணை சாக்கடையில் ஒரு வாரமா படுக்க வச்சு இருக்கானுங்க.
உத்திர பிரதேசத்தை பார்த்து உலகமே வியக்கிறது…,’’ என்று எழுதப்பட்டுள்ளது.
பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது ஒரு ஸ்கிரிப்டட் வீடியோ என்றும், உண்மையல்ல என்றும் தெரியவந்தது.
Ankur Sharma Vines என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் கடந்த 2023ம் ஆண்டு மேற்கண்ட வீடியோ முதலில் பகிரப்பட்டுள்ளது. அதில், Disclaimer என்று குறிப்பிட்டுள்ளதையும் கண்டோம்.
இதுபோன்று நிறைய வீடியோ குறிப்பிட்ட ஃபேஸ்புக் பக்கத்தில் இடம்பெற்றுள்ளன.
மேலும், அந்த ஃபேஸ்புக் ஐடி தனது சுயவிவர குறிப்பில், நடிகர் என்று கூறியுள்ளதையும் காண முடிகிறது.
இதே நபர், Ankur Jatuskaran என்ற யூடியுப் சேனல் மூலமாக, கடந்த மார்ச் 31, 2023 அன்று குறிப்பிட்ட வீடியோவை பகிர்ந்துள்ளதையும் கண்டோம்.
இதன்மூலமாக, பல மாதங்களுக்கு முன்பு யூடியுப் மற்றும் ஃபேஸ்புக்கில் ஷேர் செய்யப்பட்ட ஒரு ஸ்கிரிப்டட் வீடியோவை தற்போது எடுத்து, உத்தரப்பிரதேசத்தில் குழந்தை இல்லாத பெண் சாக்கடையில் படுத்து, பரிகாரம் செய்ததாகக் கூறி சிலர் வதந்தி பரப்புவதாக, சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Title:உத்தரப் பிரதேசத்தில் குழந்தை வரம் கேட்டு சாக்கடையில் படுத்த பெண் என்ற தகவல் உண்மையா?
Fact Check By: Pankaj IyerResult: MISLEADING
