2015ல் எடுக்கப்பட்ட ராஜபக்சே குடும்ப புகைப்படம் தற்போது பரவுவதால் குழப்பம்…

அரசியல் | Politics உலகச் செய்திகள் | World News சமூக ஊடகம் | Social

‘’ராஜபக்சே குடும்பம் கொழும்பில் இருந்து, ஹெலிகாப்டர் உதவியுடன் திருகோணமலைக்கு தப்பியோடும் புகைப்படம்,’’ எனக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் புகைப்படம் ஒன்றை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim Link I Archived Link

உண்மை அறிவோம்:
இந்த நியூஸ் கார்டில் one india tamil லோகோ இடம்பெற்றுள்ளதைக் காண முடிகிறது. இதன்பேரில், குறிப்பிட்ட ஒன் இந்தியா ஃபேஸ்புக் பக்கத்தில் தகவல் தேடியபோது இந்த நியூஸ் கார்டு இருந்தது. ஆனால், அதனை ஆர்கிவ் செய்து முடிப்பதற்குள் அகற்றிவிட்டனர். இருந்தாலும், Archive லிங்க் கீழே தரப்பட்டுள்ளது.

Archived Link

இதன்படி, ஒன் இந்தியா ஊடகம் இதனை சரிபார்க்காமல் முதலில் பகிர, மற்ற சமூக வலைதள பயனாளர்களும் உண்மை என நம்பி ஷேர் செய்வதாக, தெரியவருகிறது.

உண்மையில், இந்த புகைப்படம் கடந்த 2015ம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் தோல்வியை தழுவிய பின், ராஜபக்சே மற்றும் அவரது குடும்பத்தினர் தங்காலை நோக்கிச் செல்ல இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான விமானத்தில் ஏறியபோது, எடுக்கப்பட்டதாகும்.

colombotelegraph link I sundaytimes link

இதுவரை கிடைத்த ஆதாரங்களின்படி, 2015ம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படத்தை தற்போதைய இலங்கை அரசியல் சூழலுடன் தொடர்புபடுத்தி வதந்தி பரப்பி வருகிறார்கள் என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Avatar

Title:2015ல் எடுக்கப்பட்ட ராஜபக்சே குடும்ப புகைப்படம் தற்போது பரவுவதால் குழப்பம்…

Fact Check By: Pankaj Iyer 

Result: False